சென்னை: பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் வெளியூர் செல்ல 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் சுற்றுப்பயணம் செய்வதையே விரும்புகின்றனர். அதேபோல் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செய்வதற்காகவும் ரயில் மற்றும் பேருந்துகளை நாடிச் செல்கின்றனர். அப்போது ஏராளமான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று திரள்வதால் கூட்டல் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.அதே சமயத்தில் பேருந்து மற்றும் ரயிலில் முன் சேவைகளையும் செயல்படுத்தி வருகிறது.

இருப்பினும் இந்த காலகட்டத்தில் முன்பதிவு சேவைகளை பயன்படுத்துவதற்கு 60 நாட்கள் கொடுக்கப்பட்டிருந்தும் விரைவில் பயண டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை அறிந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் பயணிகளிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தது. அப்போது முன்பதிவு செய்யும் நாட்களை உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பயணிகளிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயணத்தை திட்டமிடுவதற்கு ஏதுவாக தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்குள் முன்பே முன்பதிவு செய்வதை 90 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்று மதியம் 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
பயணிகள் கடைசி நேர கூட்டம் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் tnstc என்ற அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு போக்குவரத்து துறை செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}