சென்னை: பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் வெளியூர் செல்ல 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் சுற்றுப்பயணம் செய்வதையே விரும்புகின்றனர். அதேபோல் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செய்வதற்காகவும் ரயில் மற்றும் பேருந்துகளை நாடிச் செல்கின்றனர். அப்போது ஏராளமான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று திரள்வதால் கூட்டல் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.அதே சமயத்தில் பேருந்து மற்றும் ரயிலில் முன் சேவைகளையும் செயல்படுத்தி வருகிறது.

இருப்பினும் இந்த காலகட்டத்தில் முன்பதிவு சேவைகளை பயன்படுத்துவதற்கு 60 நாட்கள் கொடுக்கப்பட்டிருந்தும் விரைவில் பயண டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை அறிந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் பயணிகளிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தது. அப்போது முன்பதிவு செய்யும் நாட்களை உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பயணிகளிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயணத்தை திட்டமிடுவதற்கு ஏதுவாக தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்குள் முன்பே முன்பதிவு செய்வதை 90 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்று மதியம் 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
பயணிகள் கடைசி நேர கூட்டம் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் tnstc என்ற அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு போக்குவரத்து துறை செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி
பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா
சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்
பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்
"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு
தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்
தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு
{{comments.comment}}