சென்னை: பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் வெளியூர் செல்ல 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் சுற்றுப்பயணம் செய்வதையே விரும்புகின்றனர். அதேபோல் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செய்வதற்காகவும் ரயில் மற்றும் பேருந்துகளை நாடிச் செல்கின்றனர். அப்போது ஏராளமான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று திரள்வதால் கூட்டல் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.அதே சமயத்தில் பேருந்து மற்றும் ரயிலில் முன் சேவைகளையும் செயல்படுத்தி வருகிறது.

இருப்பினும் இந்த காலகட்டத்தில் முன்பதிவு சேவைகளை பயன்படுத்துவதற்கு 60 நாட்கள் கொடுக்கப்பட்டிருந்தும் விரைவில் பயண டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை அறிந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் பயணிகளிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தது. அப்போது முன்பதிவு செய்யும் நாட்களை உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பயணிகளிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயணத்தை திட்டமிடுவதற்கு ஏதுவாக தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்குள் முன்பே முன்பதிவு செய்வதை 90 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்று மதியம் 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
பயணிகள் கடைசி நேர கூட்டம் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் tnstc என்ற அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு போக்குவரத்து துறை செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}