திருச்சி: மக்களின் பசி, பட்டினியை போக்காமல் மலைமேல் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கூறுகிறார்கள். அயோத்தியில் ராமரை வைத்து செய்த அரசியல் எடுபடவில்லை. தற்போது திடீரென முருகன் மீது பாசம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், மக்களின் பசி, பட்டினியை போக்காமல் மலைமேல் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கூறுகிறார்கள். அயோத்தியில் ராமரை வைத்து செய்த அரசியல் எடுபடவில்லை. திடீரென்று முருகன் மீது பாசம். முருகனும் சிவனும் இந்துக் கடவுளா? சைவக் கடவுளா? தேர்தல் வரும்போது மட்டும் முருகன் மீது பாசம் வருகிறது. கோயிலுக்குள் நடக்கும் ஊழலைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள் பார்ப்போம்.
அறநிலையத் துறை நேர்மையாக இருக்கிறதா? அருகில் இருக்கும் மலையை வெட்டி கல்குவாரியாக மாற்றுகிறார்கள் இந்த மலையில் மட்டும் தான் முருகன் இருக்கிறாரா? நாட்டிலுள்ள பிரச்சனைகளுக்கு கடவுளை வைத்து மூடி மறைக்கின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரம் மூலம் திமுக வலுப்பெறுகிறது. சிறுபான்மை மக்களின் 15 சதவீத ஓட்டு அவர்களுக்கு உறுதியாகிறது.

கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை தொடவுள்ளது. ஒரு கோடி பேருக்கு கொடுத்த நிலையில், கூடுதலாக 36 லட்சம் பேருக்கு கொடுக்கவிருப்பதாகக் கூறுகின்றனர். விடுபட்டவர்களுக்கு கொடுப்பது என்பது 2 மாதங்களில் தேர்தல் இருக்கும் நிலையில் தான் ஞாபகம் வருகிறதா?. பிப்ரவரியில் மடிக்கணிணி கொடுக்கிறார்கள். ஏன் தெரியுமா மார்ச்சில் தேர்தல் வருகிறது.
வாக்கைக் குறிவைத்துத்தான் எல்லாவற்றையும் நகர்த்துகிறார்கள். இதனால் தான் இவர்களை விளம்பர அரசியல் என்கிறோம். 10 லட்சம் கோடியில் நிறைவேற்றப்பட்ட ஏதேனும் ஒரு நலத்திட்டத்தை அரசு சொல்ல வேண்டும். நல்ல கல்வி, போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், உலகத்தர மருத்துவம் என ஏதேஷம் ஒன்றைச் சொல்ல வேண்டும். தேர்தல் வருவதற்கு முன்னால், ஏன் எங்கள் மீது அக்கறை வருவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
meenakshi thirukalyanam 2026 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் 2026 கோலாகலம்
தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்
புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு
புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு
இதயம் என்னும் கவிதை...!
குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!
{{comments.comment}}