மலரே !

May 14, 2026,10:21 AM IST

- ரதிதேவி


மறுநாள் என்ற  ஒன்றில்லை.

ஆயினும் மாறாத சிரிப்புடன் இருக்கிறாய்

பிள்ளை போல...


மகரந்தம் தாங்கும் தாய்

உனக்கு 

மகப்பேறு பார்க்க இன்று வரை

ஆள் இல்லை...


மிதித்து செல்லும் வண்டுக்கு கூட 

வண்டி வண்டியாய் வழங்குகிறாய் 

வழவழப்பாய் தேனை...





எவர் சூடாமல் போனாலும், 

சுரத்தில்லாத வாழ்வை எண்ணி 

என்றும் ஏங்கியதில்லை

மனிதர் போல....


யார் வாழ்த்தாவிட்டாலும்

மணம் வாடாமல் வாழ்த்துகிறாய்.


உன்னை மங்கையோரோடு 

ஒப்பனை செய்கிறான் ஓர் கவிஞன் 


பூவையின் பூ வே 

இறைவனின் 

இதயமும் 

பாதமும் 

எந்நொடியும் தொடும் மலரே ...



நீயின்றி 

இவ்வுலகில் 

பூஜை ஏதும் நிகழுமோ ..


முகையாக

அரும்பாக

மொட்டாக

அலராக

மலராக 

பூ வாக

உந்தன் நிலைகளோ


மலரின் மலரே!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்