மலரே !

May 14, 2026,10:21 AM IST

- ரதிதேவி


மறுநாள் என்ற  ஒன்றில்லை.

ஆயினும் மாறாத சிரிப்புடன் இருக்கிறாய்

பிள்ளை போல...


மகரந்தம் தாங்கும் தாய்

உனக்கு 

மகப்பேறு பார்க்க இன்று வரை

ஆள் இல்லை...


மிதித்து செல்லும் வண்டுக்கு கூட 

வண்டி வண்டியாய் வழங்குகிறாய் 

வழவழப்பாய் தேனை...





எவர் சூடாமல் போனாலும், 

சுரத்தில்லாத வாழ்வை எண்ணி 

என்றும் ஏங்கியதில்லை

மனிதர் போல....


யார் வாழ்த்தாவிட்டாலும்

மணம் வாடாமல் வாழ்த்துகிறாய்.


உன்னை மங்கையோரோடு 

ஒப்பனை செய்கிறான் ஓர் கவிஞன் 


பூவையின் பூ வே 

இறைவனின் 

இதயமும் 

பாதமும் 

எந்நொடியும் தொடும் மலரே ...



நீயின்றி 

இவ்வுலகில் 

பூஜை ஏதும் நிகழுமோ ..


முகையாக

அரும்பாக

மொட்டாக

அலராக

மலராக 

பூ வாக

உந்தன் நிலைகளோ


மலரின் மலரே!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை!

news

Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

news

Tamil Poem: எஞ்சுவதே உன்னதம்!

news

உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்

news

ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு

news

முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!

news

'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!

news

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

news

எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்