18 கொலை.. 60 கேஸ்.. மேற்கு உ.பியை உலுக்கி வந்த அனில் துஜானா.. யார் இவர்?

May 05, 2023,10:36 AM IST
லக்னோ: மேற்கு உத்தரப் பிரதேசத்தை நீண்ட காலமாக உலுக்கி வந்த பிரபல கேங்ஸ்டர் அனில் துஜானா நேற்று போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் அவரைப் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் சராசரியாக தினசரி ஒரு கேங்ஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார். ஒன்று போலீஸார் சுட்டு வீழ்த்துகின்றனர்.. இல்லை யாராவது ஒரு கோஷ்டி இதைச் செய்கிறது. ரவுடிகளும், கேங்ஸ்டர்களும் வளைத்து வளைத்து வேட்டையாடப்படுகிறார்கள். இதனால் உத்தரப் பிரதேசமே ரத்த பூமியாக மாறி நிற்கிறது.

சமீபத்தில் கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஆதிக் அகமது, அவரது தம்பி மற்றும் ஆதிக்கின் மகன் ஆகியோர் அடுத்தடுத்து கொடூரமாக கொல்லப்பட்டனர். ஆதிக் மகனை போலீஸார் சுட்டுக் கொன்றனர். ஆதிக் மற்றும் அவரது தம்பியை பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் ஊடுறுவிய ஒரு கும்பல் சுட்டுக் கொன்றது. 

இந்த நிலையில் உ.பிக்கு அருகில் உள்ள டெல்லியில் திஹார் சிறையில் வைத்து ஒரு கேங்ஸ்டர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். நேற்று உத்தரப் பிரதேச போலீஸார் ஒரு கேங்ஸ்டரை என்கவுண்டர் செய்துள்ளனர்.

நேற்று கொல்லப்பட்ட ரவுடியின் பெயர் அனில் துஜானா. இவருக்கு மேற்கு உ.பியின் சோட்டா ஷகீல் என்ற பெயர் உண்டாம். மிகப் பெரிய கேங்ஸ்டராக இவர் வலம் வந்துள்ளார். இவர் மீது 18 கொலை வழக்கு உள்பட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.  காஸியாபாத், டெல்லி, ஹரியானா ஆகிய பகுதிகளில் இவர் சேட்டை செய்து வந்தார். கடந்த ஏப்ரல் 10ம் தேதிதான் திஹார் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தார். தனக்கு எதிராக சாட்சி சொன்னவர்களை இவர் மிரட்டுவதாக தகவல் வந்தது. இந்த நிலையில்தான் அவரை போலீஸார் வேட்டையாடியுள்ளனர்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள துஜானா என்ற  கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். இவரது ஒரிஜினல் பெயர் அனில்நகர்.  நீண்ட காலமாக ரவுடித்தனம் செய்து வந்த நபர். 

திஹார் சிறையிலிருந்து வெளியே வந்ததுமே இவர் மீது புதிதாக 2 வழக்குகளைப் போலீஸார் போட்டனர். அதன் பின்னர் நேற்று என்கவுண்டரில் கொன்று விட்டதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி

news

பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா

news

சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்

news

பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்

news

"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி

news

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு

news

தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்

news

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

news

பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்