சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 28ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியைக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 10.15 மணிக்கு தொடங்குகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான 18 வது ஐபிஎல் லீக் தொடர் கடந்த 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் பெங்களூரு அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பெங்களூர் அணி தனது முதல் வெற்றியையும் பதிவு செய்தது.
அதேபோல் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி நடைபெறும் போது இறுதி 19 ஆவது ஓவரில் களமிறங்கிய தல தோனி விண்ணிங் சாட் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
ஆனால் இரண்டு பந்துகள் பிடித்த தோனி டிபன்ஸ் மட்டுமே வைத்து ரன் எதுவும் எடுக்கவில்லை. இறுதியில் ரச்சின் ரவிந்த்ரா ஒரு சிக்ஸ் அடித்து வெற்றியை நிலைநாட்டினார். சென்னை அணியின் முதல் போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒன்று திரண்டி உற்சாகமாக போட்டியை கண்டு களித்தனர். அதே சமயத்தில் தோனி ரன் எடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தல தரிசனத்தை கண்டு விட்டோம் என ரசிகர்கள் உற்சாகத்துடன் வலம் வந்தனர்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இந்த அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 28ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
ஏனெனில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணியில் தோனி இருக்கும்போதே பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இதில் யார் வெற்றி பெறுவார் அல்லது வேறு எந்த அணி வெற்றி வாய்ப்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் வரும் 28ஆம் தேதி ஆர் சி பி மற்றும் சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று காலை 10:15 மணிக்கு தொடங்குகிறது. 10.15 மணிக்கு www.chennaisuperkings.com என்ற இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக்கொள்ளலாம். ஒரு டிக்கெட்டின் விலை ₹ 1700 முதல் 7500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}