"ஊட்டி மலை பியூட்டி"... மீண்டும்  தொடங்கியது.. ஜிலு ஜிலு மலை ரயில்

Nov 08, 2023,10:52 AM IST
ஊட்டி: வடகிழக்கு பருவமழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.

தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் பல்வேறு இடங்களில் கன மழை மற்றும் மிக கனமழை பரவலாக பெய்து வருகிறது.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் டூ ஊட்டி மலை ரயில் பாதையான, கல்லாரில் இருந்து ரன்னிமேடு வரைக்கும்  உள்ள பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்ததால் கடந்த 4ஆம் தேதி ஊட்டி மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக மலை ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
 


தற்போது மலை ரயில் மீண்டும் சீரமைக்கப்பட்டது. மேலும் மழையின் அளவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலையில் சேவை இன்று காலை 7:10 மணிக்கு  இயக்க சேலம் கோட்ட ரயில்வே தீர்மானித்தது. அதன்படி இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இன்று புறப்பட்ட மலை ரயிலில் 180 பேர் பயணம் செய்தனர்.

ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக பயணத்தை தொடங்கினர். பிறகென்ன ஊட்டிக்குக் கிளம்புங்க.. ஹாயாக மலை ரயிலில் பயணத்தை அனுபவிங்க.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்