ஆளுநர் ஆர். என். ரவியிடம்.. எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த புகார் மனு.. அதில் உள்ளது என்ன?

Mar 10, 2024,06:43 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் சந்தித்து புகார் மனு ஒன்றைக்  கொடுத்துள்ளனர்.


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக குழு இன்று ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்துப் பேசியது. அந்தக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள்  சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.


இந்த சந்திப்பின்போது புகார் மனு ஒன்றை எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் வழங்கினார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி  பேசுகையில், போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்திலிருந்து உதயநிதி ஸ்டாலின் டிரஸ்டுக்கு ஜாபர் சாதிக் நிதியுதவி அளித்துள்ளார். இந்தப் பணத்தில்தான் தேர்தலை திமுக சந்திப்பதாக சொல்கிறார்கள். 




தமிழ்நாடு காவல்துறை இந்த விஷயத்தில் சரிவர செயல்படவில்லை. போதைப் பொருள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்து விட்டது. பள்ளிப் பிள்ளைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருட்களை தடுக்க தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படியே போனால் அடுத்த 7 வருடங்களில் தமிழ்நாடு போதைப் பொருட்களின் மையமாக மாறியிருக்கும். இதுகுறித்து ஆளுநரிடம் விளக்கி மனுவாக அளித்துள்ளோம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.


ஆளுநரிடம் அளித்த மனுவில், எங்கெல்லாம் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்பது குறித்த விவரம் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்