சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக குழு இன்று ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்துப் பேசியது. அந்தக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது புகார் மனு ஒன்றை எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் வழங்கினார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்திலிருந்து உதயநிதி ஸ்டாலின் டிரஸ்டுக்கு ஜாபர் சாதிக் நிதியுதவி அளித்துள்ளார். இந்தப் பணத்தில்தான் தேர்தலை திமுக சந்திப்பதாக சொல்கிறார்கள்.
தமிழ்நாடு காவல்துறை இந்த விஷயத்தில் சரிவர செயல்படவில்லை. போதைப் பொருள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்து விட்டது. பள்ளிப் பிள்ளைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருட்களை தடுக்க தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படியே போனால் அடுத்த 7 வருடங்களில் தமிழ்நாடு போதைப் பொருட்களின் மையமாக மாறியிருக்கும். இதுகுறித்து ஆளுநரிடம் விளக்கி மனுவாக அளித்துள்ளோம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
ஆளுநரிடம் அளித்த மனுவில், எங்கெல்லாம் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்பது குறித்த விவரம் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}