ஆளுநர் ஆர். என். ரவியிடம்.. எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த புகார் மனு.. அதில் உள்ளது என்ன?

Mar 10, 2024,06:43 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் சந்தித்து புகார் மனு ஒன்றைக்  கொடுத்துள்ளனர்.


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக குழு இன்று ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்துப் பேசியது. அந்தக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள்  சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.


இந்த சந்திப்பின்போது புகார் மனு ஒன்றை எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் வழங்கினார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி  பேசுகையில், போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்திலிருந்து உதயநிதி ஸ்டாலின் டிரஸ்டுக்கு ஜாபர் சாதிக் நிதியுதவி அளித்துள்ளார். இந்தப் பணத்தில்தான் தேர்தலை திமுக சந்திப்பதாக சொல்கிறார்கள். 




தமிழ்நாடு காவல்துறை இந்த விஷயத்தில் சரிவர செயல்படவில்லை. போதைப் பொருள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்து விட்டது. பள்ளிப் பிள்ளைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருட்களை தடுக்க தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படியே போனால் அடுத்த 7 வருடங்களில் தமிழ்நாடு போதைப் பொருட்களின் மையமாக மாறியிருக்கும். இதுகுறித்து ஆளுநரிடம் விளக்கி மனுவாக அளித்துள்ளோம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.


ஆளுநரிடம் அளித்த மனுவில், எங்கெல்லாம் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்பது குறித்த விவரம் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த நிறமானாலும்.. ஏற்புடையதே.. இதயத்தில் தெளிவு இருந்தால்!

news

நல் இதயங்கள் உடைந்தால்

news

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

news

தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை

news

வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.1,600 குறைவு!

news

சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு...காரணம் இது தானா?

news

புலி வருமானத்தை மறைத்த வழக்கு.. விஜய்க்கு விதித்த ரூ. 1.50 கோடி அபராதம் செல்லும்!

news

கேரளாவில் சுடிதார் அணிந்து வந்ததால் ரோட்டிலேயே நிறுத்தப்பட்ட தலைமை ஆசிரியர்!

news

கோடாங்கி (உண்மை சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்ட ஒரு திகில் தொடர்-1)

அதிகம் பார்க்கும் செய்திகள்