- பாவலர் மாயோன் மங்கை
ஆத்தோரம் நாணலிலே
அழகாய் விளையாடி
ஊத்தோரம் ஓலை கட்டி
ஒத்துமையா விளையாடி
செந்நெல்லுச் சோறாக்கி
சேம்பிலை மேல் பரப்பி
கையறுத்துக் கறிசமைத்து
நகைசொல்லி உறவாடி
கட்டிளங்காளை அவன்
கருப்பண்ண சாமி அவன்
காலால் இடறி விட்டான்
காதல் மொழி பேசினானே

காதலை வார்த்து விட்டுக்
காற்றாய்ப் பறந்தானே
பறந்தவனை மறவேனே
பக்குவமா முடிந்தேனே
வீட்டில் நான் தனித்திருக்க
விளையாட நினைத்தானோ
உண்ணும் நீர் கேட்டான்
உணராது நான்தந்தேன்
வளைக்கரம் பற்றிநின்றான்
வலிந்து மார் கொண்டான்
பிடியிடையை விரல் தடவ
பித்தாகி நான் நின்றேன்
இன்பமே எனக்கு என்று
இனியரிடம் நீ சொல்லேன்
கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி போராட்டம் எதிரொலி.. பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்
என் மகன் சாதித்து விட்டார்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித்தின் தாயார் பெருமிதம்
நான் யாருக்கு என்னை நிரூபிக்க வேண்டும்.. என்னைக் குறை கூறுவது நியாயமா.. சோனம் வாங்சுக்
இன்று முதல் நான் அரசியல் துறவறம் பூணுகிறேன்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.. நடிகை ஜோதிகா பரபரப்பு பதிவு
அனாதைகள் யாருடைய குழந்தைகள்???
நன்றொன்று உண்டென்று
சிறிதாய் இருந்தது பெரிதாகி விட்டது.. வீடு காலி!
பணத்தை வென்ற பாசம்!
{{comments.comment}}