சுடர்க்கொடி கேளாய்!

Jun 11, 2026,04:12 PM IST

- பாவலர் மாயோன் மங்கை


ஆத்தோரம்  நாணலிலே

அழகாய்  விளையாடி

ஊத்தோரம்  ஓலை கட்டி

ஒத்துமையா  விளையாடி


செந்நெல்லுச்  சோறாக்கி

சேம்பிலை மேல் பரப்பி

கையறுத்துக் கறிசமைத்து

நகைசொல்லி  உறவாடி


கட்டிளங்காளை அவன்

கருப்பண்ண சாமி அவன்

காலால் இடறி விட்டான்

காதல் மொழி பேசினானே




காதலை வார்த்து விட்டுக்

காற்றாய்ப்  பறந்தானே

பறந்தவனை  மறவேனே

பக்குவமா முடிந்தேனே


வீட்டில் நான் தனித்திருக்க

விளையாட  நினைத்தானோ

உண்ணும் நீர் கேட்டான்

உணராது நான்தந்தேன்


வளைக்கரம் பற்றிநின்றான்

வலிந்து மார் கொண்டான்

பிடியிடையை  விரல் தடவ

பித்தாகி நான் நின்றேன்


இதுதான் காதல் என்பதா   

இன் தோழி நீ   கூறேன்

இன்பமே எனக்கு என்று

இனியரிடம் நீ சொல்லேன்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!

news

அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!

news

கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை

news

தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை

news

எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்

news

என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?

news

நமது துன்பத்திற்கு நாமே காரணமா?

news

திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு

news

ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்