சுடர்க்கொடி கேளாய்!

Jun 11, 2026,04:12 PM IST

- பாவலர் மாயோன் மங்கை


ஆத்தோரம்  நாணலிலே

அழகாய்  விளையாடி

ஊத்தோரம்  ஓலை கட்டி

ஒத்துமையா  விளையாடி


செந்நெல்லுச்  சோறாக்கி

சேம்பிலை மேல் பரப்பி

கையறுத்துக் கறிசமைத்து

நகைசொல்லி  உறவாடி


கட்டிளங்காளை அவன்

கருப்பண்ண சாமி அவன்

காலால் இடறி விட்டான்

காதல் மொழி பேசினானே




காதலை வார்த்து விட்டுக்

காற்றாய்ப்  பறந்தானே

பறந்தவனை  மறவேனே

பக்குவமா முடிந்தேனே


வீட்டில் நான் தனித்திருக்க

விளையாட  நினைத்தானோ

உண்ணும் நீர் கேட்டான்

உணராது நான்தந்தேன்


வளைக்கரம் பற்றிநின்றான்

வலிந்து மார் கொண்டான்

பிடியிடையை  விரல் தடவ

பித்தாகி நான் நின்றேன்


இதுதான் காதல் என்பதா   

இன் தோழி நீ   கூறேன்

இன்பமே எனக்கு என்று

இனியரிடம் நீ சொல்லேன்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்