- பாவலர் மாயோன்மங்கை
நெல்லுக்குத்திப் பாறையிலே
சொல்லக்குத்திப் போனவளே
முள்ளுப்போல தைக்குதடி
முனுமுனுத்த. உன்
வார்த்தெ
முள்ளுக் காயத்துக்கு
முள்முருங்க மருந்து உண்டு
சொல்லாலக் குத்தியது
வலிக்குதடி வலிக்குதடி
மருந்து இல்லாம மனசு
ரொம்பத் துடிக்குதடி

வருந்தி நான் கிடக்க
விருந்துக்கு போனதென்ன?
செம்பருத்திப் பூ இதழில்
சிந்துகின்ற தேனெடுத்து
சிருங்காரப் பார்வையிலே
சிரித்தே தடவிடடி
முள்ளுச்சொல்லு
கள்ளாகும்
முகமெல்லாம் களை ஆகும்
கல்ல விட்டு எறிந்தாலும்
முல்லைப் பூவாக மாறும்
தெள்ளுத்தமிழ் பாட்டப்போலே
நெஞ்சிலே நீ நிறைவே
விளிம்பு நிலை மக்களுக்கான ஒற்றுமையும், கருணையும்!
திருமண நாள்!
தேனும் மருந்தாகும் தித்திக்கும் விருந்தாகும்!
அன்னையாய் மாறுகிறாய்.. ஆறுதலாய்ப் பேசுகிறாய்!
அன்னையின் மருத்துவம்
சிவகணங்களே காணாத ஈசனின் திருத்தோற்றம்.. அன்னை தடாதகை - 11
கரந்தை தமிழ்ச்சங்கத்தின் உலகத் தமிழ் செம்மொழி சைவ மாநாடு.. 2027 ஏப்ரல் 14ல் தொடக்கம்
உலகத்தின் முதல் மொழி அம்மா
விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி : முதல்வர் விஜய் அறிவிப்பு
{{comments.comment}}