Tamil Poem: செல்லக்குட்டி வெல்லக்கட்டி!

Jun 08, 2026,11:34 AM IST

- பாவலர் மாயோன்மங்கை


நெல்லுக்குத்திப் பாறையிலே

சொல்லக்குத்திப் போனவளே


முள்ளுப்போல தைக்குதடி   

முனுமுனுத்த.  உன்

வார்த்தெ


முள்ளுக் காயத்துக்கு

முள்முருங்க மருந்து உண்டு


சொல்லாலக் குத்தியது

வலிக்குதடி வலிக்குதடி


மருந்து இல்லாம மனசு

ரொம்பத் துடிக்குதடி




வருந்தி நான் கிடக்க

விருந்துக்கு  போனதென்ன?


செம்பருத்திப் பூ இதழில்

சிந்துகின்ற  தேனெடுத்து


சிருங்காரப் பார்வையிலே  

சிரித்தே தடவிடடி


முள்ளுச்சொல்லு

கள்ளாகும்

முகமெல்லாம் களை ஆகும்


கல்ல விட்டு எறிந்தாலும்

முல்லைப்  பூவாக மாறும்


செல்லக்குட்டி  நீ  எனக்கு

வெல்லக்கட்டியா இனிப்பே


தெள்ளுத்தமிழ் பாட்டப்போலே

நெஞ்சிலே  நீ நிறைவே

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

news

உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்