- பாவலர் மாயோன்மங்கை
நெல்லுக்குத்திப் பாறையிலே
சொல்லக்குத்திப் போனவளே
முள்ளுப்போல தைக்குதடி
முனுமுனுத்த. உன்
வார்த்தெ
முள்ளுக் காயத்துக்கு
முள்முருங்க மருந்து உண்டு
சொல்லாலக் குத்தியது
வலிக்குதடி வலிக்குதடி
மருந்து இல்லாம மனசு
ரொம்பத் துடிக்குதடி

வருந்தி நான் கிடக்க
விருந்துக்கு போனதென்ன?
செம்பருத்திப் பூ இதழில்
சிந்துகின்ற தேனெடுத்து
சிருங்காரப் பார்வையிலே
சிரித்தே தடவிடடி
முள்ளுச்சொல்லு
கள்ளாகும்
முகமெல்லாம் களை ஆகும்
கல்ல விட்டு எறிந்தாலும்
முல்லைப் பூவாக மாறும்
தெள்ளுத்தமிழ் பாட்டப்போலே
நெஞ்சிலே நீ நிறைவே
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
விடியலைத் தாடி
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
Tamil Poem: மருதாணி!
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
{{comments.comment}}