டெல்லி: உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (RAW) புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) நடவடிக்கையின் போது முக்கிய உளவுத்துறை நடவடிக்கைகளுக்குப் பராக் ஜெயின் தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதற்கு "ஆப்ரேஷன் சிந்தூர்" என்று பெயரிடப்பட்டது. இத்தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குப் பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதிகளே காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது. ஆனால், பாகிஸ்தான் இதனை மறுத்ததுடன், ஒரு சுதந்திரமான விசாரணையையும் கோரியது. நான்கு நாட்கள் சண்டைக்குப் பிறகு மே 10 அன்று போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு முக்கியப் பங்காற்றியவர்தான் பராக் ஜெயின். தற்போது 'ரா' அமைப்பின் இரண்டாவது மூத்த அதிகாரியாகப் பராக் ஜெயின் உள்ளார். தற்போதைய 'ரா' தலைவர் ரவி சின்ஹா ஜூன் 30 அன்று ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரிடமிருந்து பராக் ஜெயின் பொறுப்பேற்பார். இவர் இரண்டு ஆண்டுகள் இந்த பதவியில் நீடிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பராக் ஜெயின் தற்போது 'ரா'வின் விமான ஆராய்ச்சி மையத்தின் (ARC) தலைவராக உள்ளார். இந்த மையம் வான்வழி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
1989-ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவைச் சேர்ந்த இந்திய காவல் பணி (IPS) அதிகாரியான பராக் ஜெயின், 'ரா' அமைப்பில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். பஞ்சாபில் பயங்கரவாதம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், இவர் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும் (SSP) மற்றும் காவல் துணைத் தலைவராகவும் (DIG) பணியாற்றியுள்ளார்.
'ரா' அமைப்பில், இவர் பாகிஸ்தான் தொடர்பான விவகாரங்களை விரிவாகக் கையாண்டுள்ளார். ஆர்ட்டிகிள் 370 நீக்கப்பட்ட காலத்தில் ஜம்மு காஷ்மீரிலும் இவர் பணியாற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களிலும் பராக் பணியாற்றியுள்ளார். கனடாவில் இவர் பணியாற்றிய காலத்தில் அங்கிருந்து செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களைக் கண்காணித்ததாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.. இன்று இரவுக்குள் கைது?
விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை.. தவெகவை சரமாரியாக விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி செந்தில்குமார்
கரூர் சம்பவம்... சிறப்பு புலனாய்வு குழு நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்: கீழடி குறித்த முதல்வர் முக ஸ்டாலினின் நெகிழ்ச்சி பதிவு!
இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பாஜக: முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம்
தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி... மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
210 தொகுதிகளில் அதிமுக வெல்லும்..அதற்கு சாட்சி தருமபுரியில் கூடிய இந்த கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
{{comments.comment}}