தேனமுதுக் குரலே தென்னங் காற்றே!

Aug 27, 2026,01:04 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


தேனமுதுக் குரலே!

தென்னங் காற்றே! 

தேன் தமிழே! 

என் தெய்வீகமே! 


வான் மழையே! 

வளர் பிறையே!

சீர் இளமைத் திறமே!

சின்னஞ் சிறு குயிலே!


மான் இனத்தின் சாயலே! 

மங்கையரில் தேவதையே!

மன்னவனின் மாதரசியே! 

மலரினும் இனிய மெல்லிசையே!




மலர் வனமே! 

மாஞ்சோலையே! 

பூஞ்சோலையில் ஒரு 

பூ மாலையே! 


என்னவளே! 

எந்தன் இனியவளே! 

வெள்ளி ரதமே!

வேந்தன் மகளே! 


சொல்லில்  அடங்காக்

குணக் குன்றே!

குறைகள் இல்லா 

ஓவியமே! 


காவியமே! எந்தன் 

கண்ணின் இமையே!

வாழ்கிறோம் நலமே! 

நம்மை வாழ்த்தட்டும் இறையே!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Nightmare

news

தேனமுதுக் குரலே தென்னங் காற்றே!

news

சேலம் மாநகரில் களைக்கட்டும் ஸ்ரீ ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக திருவிழா

news

நேபாள பேரிடருக்கு நிலநடுக்கம் அல்ல.. பனிப்பாறை சரிவே பேரழிவிற்குக் காரணம்: அமெரிக்கா

news

நேபாள வெள்ளப்பெருக்கு: கைலாஷ் யாத்திரை சென்ற 22 தமிழர்கள் பத்திரமாக மீட்பு

news

Mettur Dam: மேட்டூர் அணை திறப்பு...சேலம் செல்கிறாரா முதல்வர் விஜய்? அதிகாரிகள் திடீர் ஆய்வு

news

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து...நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்

news

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு.. இந்த அறிகுறிகள் இருந்தால்.. காதாரத்துறை எச்சரிக்கை

news

குழந்தை பெற்றால் ரூ.55 லட்சம் நிதியுதவி...பிறப்பு விகிதத்தை உயர்த்த சிங்கப்பூர் அரசு அதிரடி

அதிகம் பார்க்கும் செய்திகள்