நீர் கொண்ட மேகம் போல் கார் குழலோ.. நீ இன்றி நான் வாழக் கூடுமோ!

Sep 10, 2026,04:33 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


நீ


வங்கக் கடலின்

புயலோ!

கங்கை நதியின் 

மகளோ! 


தங்கத் தாரகை

நிழலோ! 

சங்கப் பலகைத்

தமிழோ!




சிங்கப் பெண்ணின் 

குரலோ!

குங்குமச் சிமிழ் போல்

அழகோ!


மங்கை குணமோ 

சந்தனமோ! 

சங்கீத கானத்தில்

மோகனக் கீர்த்தனமோ!


நீர் கொண்ட மேகம் போல் 

கார் குழலோ! 

நீ இன்றி நான் வாழக்

கூடுமோ!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்