மணிமகுடம் சூட்டவா? மலர்க் கொடியே அருகில் வா!

Sep 09, 2026,04:36 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


மணிமகுடம் சூட்டவா?

மலர்க் கொடியே அருகில் வா!

சிறகடித்துப் பறக்கவா?

சிறு கிளியே நீயும் வா!


நீ சொன்னதெல்லாம் 

கேட்கவா?

உன் சொல் எல்லாம் 

அமுதம் அல்லவா! 


நீ சிரிக்கின்ற பெண் நிலவா? 

வானில் வருகிறதே விண்ணிலா

அது உன்னைப் பார்க்கவா?

மற்றும் உன்னோடு பேசவா?




தேனில் நனைந்த 

பலா அல்லவா!

அது போல் தித்திப்பது உன் 

திருவாய்மொழி அல்லவா! 


நல்லதே நடக்கும் அல்லவா! 

என்னோடு நீ இருக்கும் 

போதெல்லாம் அல்லவா! எமை

எப்போதும் வாழவை  இறைவா!


ஊர் உலகம் 

மெச்ச வாழ வா!

உத்தமியே! என் உயிரும் 

நீ அல்லவா!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!

news

மணிமகுடம் சூட்டவா? மலர்க் கொடியே அருகில் வா!

news

"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!

news

சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!

news

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

news

மாமன் கூட நடந்து பாரு மகிழ்வுடனே தொடர்ந்து பாரு!

news

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்

news

மகளே நிறைவேற்றுவாயா?

news

அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு இனி நேரக் கட்டுப்பாடு கட்டாயம் - அமைச்சர் அருண்ராஜ்

அதிகம் பார்க்கும் செய்திகள்