மார்ச் 3.. பெற்றோர்களே மறந்துடாதீங்க.. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு.. போலியோ சிறப்பு முகாம்!

Mar 01, 2024,07:29 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரும் மார்ச் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படவுள்ளது. இதில் கலந்து கொண்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்குமாறு பெற்றோர்களுக்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.


போலியோ என்றால் என்ன?




இளம்பிள்ளை வாதம் என்று அழைக்கப்படும் போலியோ, மலம் வழியாக பரவும் தொற்று நோயாகும். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இந்த தொற்று தசைநார்களைப் பலவீனம் அடைய செய்து நரம்புகளை பதிக்கிறது. நரம்புகளின் சேதத்தைப் பொறுத்து வாத நோய் ஏற்படுகிறது. இந்த வாத நோய் இளம் பிள்ளை வாதம் என அழைக்கப்படுகிறது. இது பொதுவாக கால்களை தாக்குகிறது.


பண்டைய காலத்தில் இளம்பிள்ளை வாத நோயால் மக்கள் கடுமையாக பாதித்து வந்தனர். இதனை தடுப்பதற்காக உலக நாடுகள் போலியோ சொட்டு மருந்தை பயன்படுத்த ஆரம்பித்தன. இந்தியாவிலும் இது கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இளம்பிள்ளைவாதம் ஒழிக்ககப்பட்டு விட்ட போதிலும் கூட வருடா வருடம் சிறப்பு முகாம் நடத்தி இந்த சொட்டு மருந்து தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.


பிறந்த குழந்தை முதல் ஐந்து வயதிற்குட்பட்ட  குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் வருடத்திற்கு இரண்டு முறை  தமிழக அரசின் சார்பில் நடத்தப்படுகிறது. தமிழகம் கடந்த 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது.


வரும் மார்ச் 3ஆம்  தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழக முழுவதும் போலியோ சொட்டு  முகாம் நடத்த தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிக்கூடங்கள், மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து  முகாம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.


அரசு விடுக்கும் கோரிக்கை:




ஒன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். போலியோ சொட்டு மருந்து மையங்கள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். தடுப்பூசி அட்டவணையின் படி,போலியோ சொட்டு மருந்து தனியார் மருத்துவமனைகளில் ஏற்கனவே வழங்கப்பட்டாலும் முகாம்களில் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.


போலியோவின் தீவிரத்தை உணர்ந்து பெற்றோர்கள் கண்டிப்பாக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிய குழந்தையின் இடது சுண்டு விரலில் மை வைக்கப்படும். தமிழக முழுவதும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க 2000  தன்னார்வலர்கள் மற்றும் அரசு பணியாளர்கள், அங்கன்வாடி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்


பெற்றோர்களே மறக்காமல் உங்கள் வீட்டுக் குழந்தையோ அல்லது பக்கத்து வீட்டிலோ அல்லது உங்கள் உறவினர்களோ யார் வீட்டிலும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து  கொடுக்க வலியுறுத்துங்கள். அவர்கள் மறந்தாலும் நீங்கள் அவர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள். இதன் மூலம் போலியோ இல்லாத உலகத்தை  உருவாக்க அனைவரும் கை கோர்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்