சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமானங்கள் இயக்க திட்டம்.. பயணிகள் மகிழ்ச்சி..!

Mar 11, 2025,05:16 PM IST

சென்னை: சென்னையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருச்சி இடையே இரு மார்க்கமாக கூடுதல் விமான சேவைகள் இயக்கப்பட இருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விமான சேவைகளை வழங்கும் நகரமாக தூத்துக்குடி திகழ்கிறது. அதாவது தூத்துக்குடி  மிகப்பெரிய தொழிற்சாலைகள், துறைமுகம், என இருப்பதால் இங்கு பஸ், ரயில், கப்பல், விமானம் என நான்கு போக்குவரத்து வசதிகளும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் தென் மாவட்டங்களுக்கு மையமாக இருக்கும் திருச்சி சர்வதேச விமான நிலையத்திலும் வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்களின் வசதிக்காக அடுத்தடுத்த புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.




குறிப்பாக சென்னை விமான நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு  மக்கள் விமானத்தில் அதிகளவு பயணம் செய்து வருகின்றனர்.  திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட தென் மாவட்ட மக்களும் தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தென் மாவட்டங்களில் கூடுதல் ரயில் சேவைகள் இல்லாத காரணத்தால், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் விமான சேவையை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 


இந்த நிலையில், மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று தற்போது பயணிகளின் தேவைக்கேற்ப   சென்னையில் இருந்து திருச்சி மற்றும் தூத்துக்குடிக்கு இரு மார்க்கமாக  கூடுதல் விமானங்களை இயக்க இருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 


அதன்படி, சென்னை டூ தூத்துக்குடி இடையே தற்போது 8 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் 30 முதல் கூடுதலாக 12 விமானங்களாக உயர்த்தப்படுகிறது. அதேபோல் சென்னை டூ திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் 14 விமானங்களில் இருந்து, தற்போது மார்ச் 22 ஆம் தேதி முதல் 16 விமானங்களாக உயர்த்தப்பட்டு விமான சேவை இயக்கப்பட உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்

news

திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

news

2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

news

தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்