தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

Aug 15, 2025,05:28 PM IST

டெல்லி: 79வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் நடந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், தனியார் துறையில் முதல் வேலையைப் பெறும் இளைஞர்களுக்கு மத்திய அரசு ரூ. 15,000 வழங்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


ரூ. 1 லட்ம் கோடியிலான இந்தத் திட்டத்தின் மூலம் 3.5 கோடிக்கும் மேலான இளைஞர்கள் பலன் பெறுவா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து  நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். தனது பேச்சின்போது பிரதமர் மோடி குறிப்பிட்டதாவது:


இந்தியாவின் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது. தரமான பொருட்களை உலக சந்தையில் கொண்டு சென்று இந்தியாவின் திறமையை நிரூபிக்கும் நேரம் இது. முழுமையான சுய சார்பே நமது இலக்கு. சுய சார்பை நோக்கி நாம் முன்னேற வேண்டும்.




இந்தியா விவசாயிகளின் நலன்களில் சமரசம் செய்து கொள்ளாது. விவசாயிகளுக்கு பாதகமான எந்த கொள்கையையும் ஏற்காது.இது வரலாற்றை உருவாக்கும் நேரம். நாம் உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். உற்பத்தி செலவைக் குறைக்க வேண்டும். தரமான பொருட்களால் உலகச் சந்தையில் நமது திறமையை நிரூபிக்கும் நேரம் இது.


விலை குறைவு, தரம் அதிகம் என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். பொருளாதார சுயநலம் அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நாம் முன்னேறி நமது இலக்குகளை அடைய வேண்டிய நேரம் இது. 


சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒரு சுதந்திர இந்தியாவை கற்பனை செய்தது போல, வல்லமைமிக்க பாரதத்தைஉருவாக்குவதற்கான உறுதிமொழியை ஏற்க வேண்டிய நேரம் இது. மற்றவர்களைக் குறை கூறுவதில் நமது ஆற்றலை வீணடிக்காமல், நம்மை நாமே வலுப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.


கடந்த பத்தாண்டுகள் சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினோம். இப்போது நாம் பெரிய இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். நமது வர்த்தகர்களும், கடைக்காரர்களும் சுதேசி பொருட்களுக்கான பலகைகளை வைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அரசாங்கக் கொள்கைகளில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால், தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள். 


இந்தியா தனது எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும், அப்போதுதான் உலகம் நமது முன்னேற்றத்தை கவனத்தில் கொள்ளும். நாம் நமக்கான பாதையை உருவாக்க வேண்டும். தேவையற்ற இணக்கங்களை நாம் களைந்துவிட்டோம். இந்தியாவைத் தடுக்க முடியாது, இது பெரிய கனவுகளைக் காண ஒரு வாய்ப்பு என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆடை ஈரப்பதத்தின் காய்ச்சல் நீ.. சூர்யன்!

news

Trisha: போதுமா.. இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா?.. வதந்திகளுக்கு த்ரிஷா கொடுத்த பதிலடி

news

ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட்நியூஸ்...சென்னை போட்டியை மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், விஜய் (பெரம்பூர்), நயினார் நாகேந்திரன் வேட்புமனு ஏற்பு

news

TN Assembly Elections: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026.. 7150 பேரின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

news

பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு செக்? 'விஜய்', 'ஜோசப்' பெயர்களில் 4 சுயேட்சைகள் போட்டி

news

Motivational Story: உழைப்பே உயர்வு!

news

விஷால் விசிலும்.. விஷாலின் விளையாட்டுகள் 7

news

உலக சுகாதார தினம் .. ஆரோக்கியமே உண்மையான செல்வம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்