தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

Aug 15, 2025,05:28 PM IST

டெல்லி: 79வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் நடந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், தனியார் துறையில் முதல் வேலையைப் பெறும் இளைஞர்களுக்கு மத்திய அரசு ரூ. 15,000 வழங்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


ரூ. 1 லட்ம் கோடியிலான இந்தத் திட்டத்தின் மூலம் 3.5 கோடிக்கும் மேலான இளைஞர்கள் பலன் பெறுவா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து  நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். தனது பேச்சின்போது பிரதமர் மோடி குறிப்பிட்டதாவது:


இந்தியாவின் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது. தரமான பொருட்களை உலக சந்தையில் கொண்டு சென்று இந்தியாவின் திறமையை நிரூபிக்கும் நேரம் இது. முழுமையான சுய சார்பே நமது இலக்கு. சுய சார்பை நோக்கி நாம் முன்னேற வேண்டும்.




இந்தியா விவசாயிகளின் நலன்களில் சமரசம் செய்து கொள்ளாது. விவசாயிகளுக்கு பாதகமான எந்த கொள்கையையும் ஏற்காது.இது வரலாற்றை உருவாக்கும் நேரம். நாம் உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். உற்பத்தி செலவைக் குறைக்க வேண்டும். தரமான பொருட்களால் உலகச் சந்தையில் நமது திறமையை நிரூபிக்கும் நேரம் இது.


விலை குறைவு, தரம் அதிகம் என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். பொருளாதார சுயநலம் அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நாம் முன்னேறி நமது இலக்குகளை அடைய வேண்டிய நேரம் இது. 


சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒரு சுதந்திர இந்தியாவை கற்பனை செய்தது போல, வல்லமைமிக்க பாரதத்தைஉருவாக்குவதற்கான உறுதிமொழியை ஏற்க வேண்டிய நேரம் இது. மற்றவர்களைக் குறை கூறுவதில் நமது ஆற்றலை வீணடிக்காமல், நம்மை நாமே வலுப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.


கடந்த பத்தாண்டுகள் சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினோம். இப்போது நாம் பெரிய இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். நமது வர்த்தகர்களும், கடைக்காரர்களும் சுதேசி பொருட்களுக்கான பலகைகளை வைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அரசாங்கக் கொள்கைகளில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால், தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள். 


இந்தியா தனது எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும், அப்போதுதான் உலகம் நமது முன்னேற்றத்தை கவனத்தில் கொள்ளும். நாம் நமக்கான பாதையை உருவாக்க வேண்டும். தேவையற்ற இணக்கங்களை நாம் களைந்துவிட்டோம். இந்தியாவைத் தடுக்க முடியாது, இது பெரிய கனவுகளைக் காண ஒரு வாய்ப்பு என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்