திருச்சி: திருச்சியில் நடந்த இரு விழாக்களில் இரு மொழிகளில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திருச்சி வருகை தந்தார். முதலில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
பட்டமளிப்பு விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் ஆங்கிலத்தில் உரையாற்றினார். இடை இடையே தமிழையும் கலந்து அவர் பேசி அசத்தினார். இந்தப் பேச்சு மொழி பெயர்க்கப்படவில்லை.

திருச்சி விமான நிலைய விழா முற்றிலும் மாறுபட்டுக் காணப்பட்டது. கிட்டத்தட்ட பாஜக விழா போல இது காட்சி அளித்தது. காரணம், இந்த விழாவுக்கு பெருமளவில் பாஜகவினர் திரண்டு வந்திருந்தனர். திமுகவினரை விட பாஜகவினரே அதிகம் இருந்ததால் அவர்களது முழக்கம், கோஷம் தூக்கலாகவே இருந்தது.
மேலும் விழாவின் தொடக்கமாக மத்திய அமைச்சர் எல். முருகன் பாரத் மாதா கி ஜெய் என்று முழக்கமிட்டு பாஜகவினரை நன்றாகவே முடுக்கி விட்டு விட்டார். இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது பாஜகவினர் அடிக்கடி கோஷமிட்டு குறுக்கீடு செய்தபடி இருந்தனர்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நீண்ட உரையாற்றினார். அப்போது அவர் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தொடங்கி பின்னர் இந்திக்கு மாறி விட்டார். தொடர்ந்து தனது பேச்சு முழுவதையும் இந்தியிலேயே பேசினார். அவரது பேச்சு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதால், அவரது கருத்துக்கள் தெளிவாக போய்ச் சேர்ந்தன.
தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் தனக்கு சக்தி கிடைப்பதாக பிரதமர் கூறியபோது பாஜகவினர் கைதட்டி அதை வரவேற்றனர். பிரதமர் மோடி பேச்சை முடித்தபோது பாரத் மாதா கி ஜெய் என்று கூறி முடித்தார்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}