திருச்சி: திருச்சியில் நடந்த இரு விழாக்களில் இரு மொழிகளில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திருச்சி வருகை தந்தார். முதலில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
பட்டமளிப்பு விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் ஆங்கிலத்தில் உரையாற்றினார். இடை இடையே தமிழையும் கலந்து அவர் பேசி அசத்தினார். இந்தப் பேச்சு மொழி பெயர்க்கப்படவில்லை.

திருச்சி விமான நிலைய விழா முற்றிலும் மாறுபட்டுக் காணப்பட்டது. கிட்டத்தட்ட பாஜக விழா போல இது காட்சி அளித்தது. காரணம், இந்த விழாவுக்கு பெருமளவில் பாஜகவினர் திரண்டு வந்திருந்தனர். திமுகவினரை விட பாஜகவினரே அதிகம் இருந்ததால் அவர்களது முழக்கம், கோஷம் தூக்கலாகவே இருந்தது.
மேலும் விழாவின் தொடக்கமாக மத்திய அமைச்சர் எல். முருகன் பாரத் மாதா கி ஜெய் என்று முழக்கமிட்டு பாஜகவினரை நன்றாகவே முடுக்கி விட்டு விட்டார். இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது பாஜகவினர் அடிக்கடி கோஷமிட்டு குறுக்கீடு செய்தபடி இருந்தனர்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நீண்ட உரையாற்றினார். அப்போது அவர் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தொடங்கி பின்னர் இந்திக்கு மாறி விட்டார். தொடர்ந்து தனது பேச்சு முழுவதையும் இந்தியிலேயே பேசினார். அவரது பேச்சு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதால், அவரது கருத்துக்கள் தெளிவாக போய்ச் சேர்ந்தன.
தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் தனக்கு சக்தி கிடைப்பதாக பிரதமர் கூறியபோது பாஜகவினர் கைதட்டி அதை வரவேற்றனர். பிரதமர் மோடி பேச்சை முடித்தபோது பாரத் மாதா கி ஜெய் என்று கூறி முடித்தார்.
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}