பட்டமளிப்பு விழாவில் ஆங்கிலம்..  ஏர்போர்ட் விழாவில் இந்தி.. இரு மொழிகளில் பேசிய பிரதமர் மோடி!

Jan 02, 2024,01:52 PM IST

திருச்சி: திருச்சியில் நடந்த இரு விழாக்களில் இரு மொழிகளில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.


பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திருச்சி வருகை தந்தார். முதலில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நரேந்திர மோடி கலந்து கொண்டார்.


பட்டமளிப்பு விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் ஆங்கிலத்தில் உரையாற்றினார். இடை இடையே தமிழையும் கலந்து அவர் பேசி அசத்தினார். இந்தப் பேச்சு மொழி பெயர்க்கப்படவில்லை.




திருச்சி விமான நிலைய விழா முற்றிலும் மாறுபட்டுக் காணப்பட்டது. கிட்டத்தட்ட பாஜக விழா போல இது காட்சி அளித்தது. காரணம், இந்த விழாவுக்கு பெருமளவில் பாஜகவினர் திரண்டு வந்திருந்தனர். திமுகவினரை விட பாஜகவினரே அதிகம் இருந்ததால் அவர்களது முழக்கம், கோஷம் தூக்கலாகவே இருந்தது.


மேலும் விழாவின் தொடக்கமாக மத்திய அமைச்சர் எல். முருகன் பாரத் மாதா கி ஜெய் என்று முழக்கமிட்டு பாஜகவினரை நன்றாகவே முடுக்கி விட்டு விட்டார். இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது பாஜகவினர் அடிக்கடி கோஷமிட்டு குறுக்கீடு செய்தபடி இருந்தனர்.


இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நீண்ட உரையாற்றினார். அப்போது அவர் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தொடங்கி பின்னர் இந்திக்கு மாறி விட்டார். தொடர்ந்து தனது பேச்சு முழுவதையும் இந்தியிலேயே பேசினார். அவரது பேச்சு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதால், அவரது கருத்துக்கள் தெளிவாக போய்ச் சேர்ந்தன.


தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் தனக்கு சக்தி கிடைப்பதாக பிரதமர் கூறியபோது பாஜகவினர் கைதட்டி அதை வரவேற்றனர். பிரதமர் மோடி பேச்சை முடித்தபோது பாரத் மாதா கி ஜெய் என்று கூறி முடித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்