சென்னை: ஜன.23ஆம் தேதி மதுரையில் நடைபெறுவதாக இருந்த பிரதமர் மோடியின் மதுரை பொதுக்கூட்டம் திடீர் என சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் மதுரைபாண்டிகோவில் அருகில் உள்ள அம்மா திடலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் ஜனவரி 23ம் தேதி நடைபெற இருந்தது. இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தமிழக பாரத ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியில் உள்ள அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், திடீரென இந்த பொதுக்கூட்டம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. அதன்பின்னர் காவல் துறைக்கு இது சம்பந்தமாக அனுமதிகோரி மனு அளிக்க இருப்பதாகவும் பாஜக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!
பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்...கோபண்ணா நம்பிக்கை
இது தான் சட்ட ஒழுங்கு தரமா?...நாங்குநேரி படுகொலை...திமுக.,வை விளாசிய விஜய்
ராஜ்ய சபா எம்பி ஆகிறார் நிதின் நபீன்: பாஜகவின் இளம் தேசிய தலைவர் பீகாரிலிருந்து தேர்வு
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை
இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு...டெல்லி பாஜக அலுவலகத்தில் நடந்தது என்ன?
திமுக - காங்கிரஸ் கூட்டணி: இழுபறிக்கு இடையில் இன்று முக்கிய அறிவிப்பு?
தடையினை உடைத்திடு
{{comments.comment}}