ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.. 10 வருடங்களு்குப் பிறகு கனடா பயணம்

Jun 17, 2025,10:39 AM IST

டெரன்டோ : பிரதமர் மோடி G7 மாநாட்டில் கலந்து கொள்ள கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பத்து வருடங்களுக்கு பிறகு அவர் கனடாவுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தில் உலக தலைவர்களுடன் முக்கியமான விஷயங்கள் பற்றி பேசவுள்ளார்.


குறிப்பாக எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் புதுமை  கண்டுபிடிப்புகள் குறித்து விவாதிக்கவுள்ளார். பிரதமர் மோடியின் 3 நாடு சுற்றுப்பயணத்தில் முதலில் சைப்ரஸ் சென்றிருந்தார். தற்போது 2வது நாடாக கனடா பயணப்பட்டுள்ளார்.


ஜூன் 16-17 தேதிகளில் கனடாவில் Kananaskis என்ற இடத்தில் G7 மாநாடு நடக்கிறது. இது பிரதமர் மோடி பங்கேற்கும் 6வது G7 மாநாடு ஆகும். கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்ததை அடுத்து, பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார். G7 அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. தற்போது கனடா G7 அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கிறது. அதனால் மாநாட்டை நடத்துகிறது. 




முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சியில் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே உறவு சரியில்லை. அதை சரி செய்ய புதிய கனடா அரசு விரும்புகிறது. அதனால்தான் கனடா தரப்பில் இருந்து பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


பிரதமர் மோடி கனடாவுக்கு செல்வது இதுவே முதல் முறை. இரு நாடுகளுக்கு இடையே உறவு மோசமான பிறகு அவர் அங்கு செல்கிறார். முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய உளவாளிகள் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொன்றதாக குற்றம் சாட்டினார். இதனால் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே உறவு மோசமானது. இந்தக் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. மேலும், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு கனடாவில் இடம் கொடுப்பதே முக்கிய பிரச்சினை என்று இந்தியா கூறியுள்ளது.


G7 மாநாட்டின்போது பிரதமர் மோடி, கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னியை சந்திக்கிறார். கார்னி, இந்தியாவுடன் உறவை "மீண்டும் கட்டியெழுப்ப" விரும்புவதாக கூறியுள்ளார். இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது பற்றி கார்னி கூறுகையில், "இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. மேலும், முக்கியமான விநியோக சங்கிலிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது" என்றார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பற்றியும் அவர் பேசினார். "சட்ட அமலாக்கத்துறையினருடனான பேச்சுவார்த்தையை தொடர நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்" என்று அவர் கூறினார்.


பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்துவிற்கு பிறகு பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் இது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆதாரங்களை உலக நாடுகளுக்கு எடுத்து சொல்ல ஏழு குழுக்களை இந்தியா அனுப்பியது என்பது நினைவிருக்கலாம்.


G7 மாநாடு என்பது உலகின் முக்கியமான நாடுகளின் கூட்டமைப்பாகும். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்