குஜராத் முதல்வராகப் பதவியேற்று 25 வருடங்கள்.. அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி

Oct 07, 2025,05:09 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சராக முதல்முறை பதவியேற்ற 2001 ஆம் ஆண்டு முதல், இன்றுடன் 25 ஆண்டுகால பொதுச்சேவையை நிறைவு செய்துள்ளார். இந்த மைல்கல்லை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


இந்திய மக்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். "2001 ஆம் ஆண்டு இதே நாளில், நான் குஜராத்தின் முதலமைச்சராக முதல்முறை பதவியேற்றேன். சக இந்தியர்களின் தொடர்ச்சியான ஆசீர்வாதங்களால், ஒரு அரசாங்கத்தின் தலைவராக எனது 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அவர் கூறுகையில், இந்திய மக்களுக்கு எனது நன்றிகள். இந்த ஆண்டு முழுவதும், நமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், நம் அனைவரையும் வளர்த்த இந்த மாபெரும் தேசத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கவும் நான் தொடர்ந்து முயற்சி செய்துள்ளேன். 




நான் முதலமைச்சராகப் பதவியேற்றபோது, என் அம்மா என்னிடம் சொன்னது நினைவிருக்கிறது - 'உன் வேலையைப் பற்றி எனக்கு அதிகம் புரியாது, ஆனால் நான் இரண்டு விஷயங்களை மட்டுமே கேட்கிறேன். முதலாவது, நீ எப்போதும் ஏழைகளுக்காக உழைக்க வேண்டும். இரண்டாவது, நீ ஒருபோதும் லஞ்சம் வாங்கக் கூடாது.' நான் மக்களிடம் சொன்னேன், நான் என்ன செய்தாலும் அது நல்ல நோக்கத்துடனும், வரிசையில் கடைசி நபருக்கும் சேவை செய்யும் பார்வையுடனும் இருக்கும்.


தொடர்ச்சியான நம்பிக்கைக்கும் அன்புக்கும் இந்திய மக்களுக்கு நான் மீண்டும் நன்றி கூறுகிறேன். நமது அன்பான தேசத்திற்கு சேவை செய்வது மிகப்பெரிய கௌரவம். இது எனக்கு நன்றியுணர்வையும் நோக்கத்தையும் நிரப்பும் ஒரு கடமை. நமது அரசியலமைப்பின் மதிப்புகளை எனது வழிகாட்டியாகக் கொண்டு, 'விக்சித் பாரத்' என்ற நமது கூட்டு கனவை நனவாக்க எதிர்காலத்தில் இன்னும் கடினமாக உழைப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.


நரேந்திர மோடி முதன்முதலில் அக்டோபர் 7, 2001 அன்று குஜராத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணமல் நடப்பதில் சிக்கல்

news

நோயை விட கொடிய மருந்து...ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி முதல்வர் விமர்சனம்

news

திருச்சி...தமிழக அரசியல் கட்சிகளின் முதல் சாய்ஸாக இருக்க என்ன காரணம்?

news

பாமக விவகாரம்...ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணி மனு

news

ஜனநாயகன் ரிலீசுக்கு மீண்டும் சிக்கல்...படத்தின் மறுஆய்வு தள்ளிவைப்பு

news

நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்