அடிமட்ட மக்களுடன் நெருக்கமாக இருந்தவர் அஜீத் பவார்.. பிரதமர் மோடி இரங்கல்

Jan 28, 2026,05:48 PM IST

டெல்லி: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார், அடி மட்ட மக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர். அவர்களுடன் நெருக்கமாக இருந்த தலைவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.


அஜீத் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜித் பவார் அவர்கள் மக்களுடன் அடிமட்ட அளவில் நேரடித் தொடர்பு கொண்ட ஒரு மக்கள் தலைவர். மகாராஷ்டிர மக்களுக்குச் சேவை செய்வதில் முன்னணியில் நின்ற உழைப்பாளி என்று பரவலாக மதிக்கப்பட்டவர். 


நிர்வாக விவகாரங்களில் அவருக்கு இருந்த புரிதலும், ஏழை மற்றும் நலிந்த மக்களை மேம்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வமும் குறிப்பிடத்தக்கவை. அவரது இந்த அகால மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி என்று தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.




இதே விபத்தில் உயிரிழந்த மற்றவர்களுக்கும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் பாராமதியில் நிகழ்ந்த துயரமான விமான விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த விபத்தில் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் துணையாக இருக்கும். இந்த ஆழமான துயரமான தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான வலிமையையும் தைரியத்தையும் வழங்க நான் வேண்டிக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


அஜீத் பவார் உள்ளிட்ட 6 பேர் பயணித்த தனி விமானம் இன்று காலை பாரமதி விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதில் படுகாயமடைந்த ஆறு பேரும் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து மகாராஷ்டிர அரசியலில் பெரும் துயரத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து

news

அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்

news

கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை!

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?

news

இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

news

கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்

news

ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?

news

வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு

news

ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்