GST reforms: மக்கள் வாழ்க்கை மேம்படும்.. வர்த்தகம் எளிதாகும்.. பொருளாதாரம் வலுப்படும்.. பிரதமர் மோடி

Sep 04, 2025,08:59 PM IST
டெல்லி: ஜிஎஸ்டி வரிச் சீரமைப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் வலுப்படும், வர்த்தகம் எளிதாகும் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கை மேம்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதிய ஜிஎஸ்டி வரிச் சீரமைப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை இருந்த அடுக்குகள் நீக்கப்பட்டு 2 விதமான வரிச் சீரமைப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், சுதந்திர தின உரையின்போது, அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற எங்களது நோக்கத்தைப் பற்றிப் பேசியிருந்தேன்.





பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஜிஎஸ்டி விகிதத்தை பரந்த அளவில் பகுத்தறிவுடன் மாற்றுதல் மற்றும் செயல்முறை சீர்திருத்தங்கள் குறித்த விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில், ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான மத்திய அரசின் திட்டங்களுக்கு கூட்டாக ஒப்புதல் அளித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது பொதுமக்கள், விவசாயிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பயனளிக்கும்.

இந்த பரந்த சீர்திருத்தங்கள் நமது குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, குறிப்பாகச் சிறு வணிகர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் எளிதாகத் தொழில் செய்வதை உறுதி செய்யும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து

news

அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்

news

கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை!

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?

news

இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

news

கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்

news

ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?

news

வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு

news

ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்