GST reforms: மக்கள் வாழ்க்கை மேம்படும்.. வர்த்தகம் எளிதாகும்.. பொருளாதாரம் வலுப்படும்.. பிரதமர் மோடி

Sep 04, 2025,08:59 PM IST
டெல்லி: ஜிஎஸ்டி வரிச் சீரமைப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் வலுப்படும், வர்த்தகம் எளிதாகும் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கை மேம்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதிய ஜிஎஸ்டி வரிச் சீரமைப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை இருந்த அடுக்குகள் நீக்கப்பட்டு 2 விதமான வரிச் சீரமைப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், சுதந்திர தின உரையின்போது, அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற எங்களது நோக்கத்தைப் பற்றிப் பேசியிருந்தேன்.





பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஜிஎஸ்டி விகிதத்தை பரந்த அளவில் பகுத்தறிவுடன் மாற்றுதல் மற்றும் செயல்முறை சீர்திருத்தங்கள் குறித்த விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில், ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான மத்திய அரசின் திட்டங்களுக்கு கூட்டாக ஒப்புதல் அளித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது பொதுமக்கள், விவசாயிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பயனளிக்கும்.

இந்த பரந்த சீர்திருத்தங்கள் நமது குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, குறிப்பாகச் சிறு வணிகர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் எளிதாகத் தொழில் செய்வதை உறுதி செய்யும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்