நீ என்ன பெரிய டாடா வா.. இனி அப்படி சொல்ல முடியாதே.. வைரமுத்து நெகிழ்ச்சி

Oct 10, 2024,11:50 AM IST

சென்னை:   நீ என்ன பெரிய டாடாவா என்று சிறு வயது முதல் புழங்கி வந்த பெயர் இன்று மறைந்து விட்டது என கவிஞர் வைரமுத்து உணர்ச்சி பொங்க வரிகளில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.


டாடா குழுமத்தின் தலைவரும் நிறுவனமான ரத்தன் டாடா  உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய இரங்கல் செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.இதனை தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் ரத்தன் டாடா மறைவிற்கும்  ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


அத்துடன் அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்படும் எனவும், இன்று ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.




இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் கவிதை நடையில் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்த வைரமுத்து கவிதை:


பெருந்தொழிலதிபர்

ரத்தன் டாட்டாவின் மறைவுக்கு

இந்தியா இரங்குகிறது


'நீ என்ன

பெரிய டாட்டாவா' என்று

சிறு வயது முதல்

புழங்கி வந்த பெயர்

இன்று மறைந்துவிட்டது


ஈட்டிய செல்வத்தில்

சரிபாதிக்கு மேல்

அறக்கட்டளை மூலம்

அறப்பணிகளுக்கு

அள்ளி வழங்கிய

ஒரு கொடையாளனை

தேசம் இழந்துவிட்டது


ஆட்சிகள்

மாறிக்கொண்டிருந்தாலும்

தன் தொழில் நேர்மையை

மாற்றிக்கொள்ளாத ஒரு

மகத்தான மனிதர்


இந்திய மனிதவளத்தைத்

தன் வேலைவாய்ப்புகளால்

செழுமை செய்தவர்


தன் நிறுவனங்களுக்கு

அவர் விட்டுச் சென்றிருக்கும்

தொழில் அறம்

நிலைக்கும் வரைக்கும்

அவர் புகழும் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Poem on Life: வாழ்க்கை!

news

இணையத்தில் செம டிரெண்டிங்.. பரபரக்கும் ‘You+Me - Against the World’ திரைப்பட கிளைமேக்ஸ்!

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

அதிகம் பார்க்கும் செய்திகள்