நீ என்ன பெரிய டாடா வா.. இனி அப்படி சொல்ல முடியாதே.. வைரமுத்து நெகிழ்ச்சி

Oct 10, 2024,11:50 AM IST

சென்னை:   நீ என்ன பெரிய டாடாவா என்று சிறு வயது முதல் புழங்கி வந்த பெயர் இன்று மறைந்து விட்டது என கவிஞர் வைரமுத்து உணர்ச்சி பொங்க வரிகளில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.


டாடா குழுமத்தின் தலைவரும் நிறுவனமான ரத்தன் டாடா  உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய இரங்கல் செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.இதனை தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் ரத்தன் டாடா மறைவிற்கும்  ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


அத்துடன் அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்படும் எனவும், இன்று ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.




இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் கவிதை நடையில் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்த வைரமுத்து கவிதை:


பெருந்தொழிலதிபர்

ரத்தன் டாட்டாவின் மறைவுக்கு

இந்தியா இரங்குகிறது


'நீ என்ன

பெரிய டாட்டாவா' என்று

சிறு வயது முதல்

புழங்கி வந்த பெயர்

இன்று மறைந்துவிட்டது


ஈட்டிய செல்வத்தில்

சரிபாதிக்கு மேல்

அறக்கட்டளை மூலம்

அறப்பணிகளுக்கு

அள்ளி வழங்கிய

ஒரு கொடையாளனை

தேசம் இழந்துவிட்டது


ஆட்சிகள்

மாறிக்கொண்டிருந்தாலும்

தன் தொழில் நேர்மையை

மாற்றிக்கொள்ளாத ஒரு

மகத்தான மனிதர்


இந்திய மனிதவளத்தைத்

தன் வேலைவாய்ப்புகளால்

செழுமை செய்தவர்


தன் நிறுவனங்களுக்கு

அவர் விட்டுச் சென்றிருக்கும்

தொழில் அறம்

நிலைக்கும் வரைக்கும்

அவர் புகழும் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!

news

நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day

news

தண்ணீரை சேகரித்து.. அடுத்த தலைமுறைக்கு சேமித்துத் தர வேண்டும்.. மாணவர்களுக்கு அறிவுரை

news

நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

news

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்