நீ என்ன பெரிய டாடா வா.. இனி அப்படி சொல்ல முடியாதே.. வைரமுத்து நெகிழ்ச்சி

Oct 10, 2024,11:50 AM IST

சென்னை:   நீ என்ன பெரிய டாடாவா என்று சிறு வயது முதல் புழங்கி வந்த பெயர் இன்று மறைந்து விட்டது என கவிஞர் வைரமுத்து உணர்ச்சி பொங்க வரிகளில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.


டாடா குழுமத்தின் தலைவரும் நிறுவனமான ரத்தன் டாடா  உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய இரங்கல் செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.இதனை தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் ரத்தன் டாடா மறைவிற்கும்  ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


அத்துடன் அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்படும் எனவும், இன்று ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.




இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் கவிதை நடையில் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்த வைரமுத்து கவிதை:


பெருந்தொழிலதிபர்

ரத்தன் டாட்டாவின் மறைவுக்கு

இந்தியா இரங்குகிறது


'நீ என்ன

பெரிய டாட்டாவா' என்று

சிறு வயது முதல்

புழங்கி வந்த பெயர்

இன்று மறைந்துவிட்டது


ஈட்டிய செல்வத்தில்

சரிபாதிக்கு மேல்

அறக்கட்டளை மூலம்

அறப்பணிகளுக்கு

அள்ளி வழங்கிய

ஒரு கொடையாளனை

தேசம் இழந்துவிட்டது


ஆட்சிகள்

மாறிக்கொண்டிருந்தாலும்

தன் தொழில் நேர்மையை

மாற்றிக்கொள்ளாத ஒரு

மகத்தான மனிதர்


இந்திய மனிதவளத்தைத்

தன் வேலைவாய்ப்புகளால்

செழுமை செய்தவர்


தன் நிறுவனங்களுக்கு

அவர் விட்டுச் சென்றிருக்கும்

தொழில் அறம்

நிலைக்கும் வரைக்கும்

அவர் புகழும் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி

news

பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா

news

சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்

news

பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்

news

"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி

news

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு

news

தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்

news

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

news

பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்