தொழில்நுட்பத்தோடு இயங்கி கூட்டுமதிப்பு அடைகிறபோது எழுத்துக்குச் சந்தை கிடைக்கும்.. வைரமுத்து

Sep 30, 2024,02:47 PM IST

சென்னை:   தொழில்நுட்பத்தோடு இயங்கி ஒரு கூட்டுமதிப்பு அடைகிறபோதுதான் எழுத்துக்குச் சரியான சந்தை கிடைக்கும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.


கபிலன் வைரமுத்துவின் நாவலுக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். கபிலன் வைரமுத்து கவிஞர் வைரமுத்துவின் இளை மகன் ஆவர். கபிலன் வைரமுத்து ஒரு திரைப்பட பாடலாசிரியர். அதுமட்டும் இன்றி விவேகம், அசுரகுரு, சிங்கப்பெண்ணே, இந்தியன் 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.




இவர் நாவல்கள் எழுதுவதிலும் வல்லவர். அத்துடன் சமூக ஆர்வலரும் கூட. இவர் எழுதிய ஆகோள் நாவலின் இரண்டாம் பாகத்திற்கு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வைரமுத்து கூறியுள்ளதாவது:


தம்பி கபிலன் வைரமுத்து

ஆகோள் நாவலின்

இரண்டாம் பாகம்

எழுதியிருக்கிறார்


‘மாக்கியவெல்லி காப்பியம்’

என்று பெயர் சூட்டியிருக்கிறார்


நாவலைத்

தொட்டுத் தொட்டு மகிழ்ந்தேன்


டிஸ்கவரி

வேடியப்பனுக்கு நன்றி


‘அண்மையில் இஸ்ரேல்

இணையவெளியில் மேற்கொண்ட 

முக்கிய முன்னெடுப்புதான்

இந்த நாவலுக்கு மூலம்’ 

என்றார் கபிலன்


யாரும்

வேட்டையாடாத காடுகளில்

வேலோடு நுழைகிறார்


‘இனி 

எழுத்து எழுத்தாக மட்டுமே

வெற்றி பெறுவது

அத்துணை எளிதல்ல மகனே!


தொழில்நுட்பத்தோடு இயங்கி

ஒரு கூட்டுமதிப்பு

அடைகிறபோதுதான்

எழுத்துக்குச் சரியான

சந்தை கிடைக்கும்’ என்றேன்;

புரிந்துகொண்டார்


நேர்மையான ஒழுக்கமான

சலிக்காத உழைப்பு

மகன்மீது எனக்கு

மரியாதை கூட்டுகிறது


விரைவாய் நிறைவாய்

வளர்வாய் மகனே! என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்