தொழில்நுட்பத்தோடு இயங்கி கூட்டுமதிப்பு அடைகிறபோது எழுத்துக்குச் சந்தை கிடைக்கும்.. வைரமுத்து

Sep 30, 2024,02:47 PM IST

சென்னை:   தொழில்நுட்பத்தோடு இயங்கி ஒரு கூட்டுமதிப்பு அடைகிறபோதுதான் எழுத்துக்குச் சரியான சந்தை கிடைக்கும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.


கபிலன் வைரமுத்துவின் நாவலுக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். கபிலன் வைரமுத்து கவிஞர் வைரமுத்துவின் இளை மகன் ஆவர். கபிலன் வைரமுத்து ஒரு திரைப்பட பாடலாசிரியர். அதுமட்டும் இன்றி விவேகம், அசுரகுரு, சிங்கப்பெண்ணே, இந்தியன் 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.




இவர் நாவல்கள் எழுதுவதிலும் வல்லவர். அத்துடன் சமூக ஆர்வலரும் கூட. இவர் எழுதிய ஆகோள் நாவலின் இரண்டாம் பாகத்திற்கு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வைரமுத்து கூறியுள்ளதாவது:


தம்பி கபிலன் வைரமுத்து

ஆகோள் நாவலின்

இரண்டாம் பாகம்

எழுதியிருக்கிறார்


‘மாக்கியவெல்லி காப்பியம்’

என்று பெயர் சூட்டியிருக்கிறார்


நாவலைத்

தொட்டுத் தொட்டு மகிழ்ந்தேன்


டிஸ்கவரி

வேடியப்பனுக்கு நன்றி


‘அண்மையில் இஸ்ரேல்

இணையவெளியில் மேற்கொண்ட 

முக்கிய முன்னெடுப்புதான்

இந்த நாவலுக்கு மூலம்’ 

என்றார் கபிலன்


யாரும்

வேட்டையாடாத காடுகளில்

வேலோடு நுழைகிறார்


‘இனி 

எழுத்து எழுத்தாக மட்டுமே

வெற்றி பெறுவது

அத்துணை எளிதல்ல மகனே!


தொழில்நுட்பத்தோடு இயங்கி

ஒரு கூட்டுமதிப்பு

அடைகிறபோதுதான்

எழுத்துக்குச் சரியான

சந்தை கிடைக்கும்’ என்றேன்;

புரிந்துகொண்டார்


நேர்மையான ஒழுக்கமான

சலிக்காத உழைப்பு

மகன்மீது எனக்கு

மரியாதை கூட்டுகிறது


விரைவாய் நிறைவாய்

வளர்வாய் மகனே! என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தவே எங்களுக்கு நேரம் போதவில்லை.. பிரதமர் மோடி

news

பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்...பகீர் கிளப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா

news

சபாநாயகர் சொன்னது மிகப்பெரிய பொய்...காங்கிரஸ் எம்.பி சுதா காந்திமதிநாதன் காட்டம்

news

பார்லிமென்ட்டில் புயலை கிளப்பிய திமுக அமைச்சரின் பேச்சு...திமுக-காங்கிரஸ் கடும் மோதல்

news

"அந்தப் பெரிய இடம் யார்?" - மடப்புரம் அஜித்குமார் மரண விவகாரத்தில் தாய் ஆவேச பேட்டி

news

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு

news

தவெக தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய இணையதளம்

news

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

news

பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்