சென்னை: தொழில்நுட்பத்தோடு இயங்கி ஒரு கூட்டுமதிப்பு அடைகிறபோதுதான் எழுத்துக்குச் சரியான சந்தை கிடைக்கும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கபிலன் வைரமுத்துவின் நாவலுக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். கபிலன் வைரமுத்து கவிஞர் வைரமுத்துவின் இளை மகன் ஆவர். கபிலன் வைரமுத்து ஒரு திரைப்பட பாடலாசிரியர். அதுமட்டும் இன்றி விவேகம், அசுரகுரு, சிங்கப்பெண்ணே, இந்தியன் 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

இவர் நாவல்கள் எழுதுவதிலும் வல்லவர். அத்துடன் சமூக ஆர்வலரும் கூட. இவர் எழுதிய ஆகோள் நாவலின் இரண்டாம் பாகத்திற்கு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வைரமுத்து கூறியுள்ளதாவது:
தம்பி கபிலன் வைரமுத்து
ஆகோள் நாவலின்
இரண்டாம் பாகம்
எழுதியிருக்கிறார்
‘மாக்கியவெல்லி காப்பியம்’
என்று பெயர் சூட்டியிருக்கிறார்
நாவலைத்
தொட்டுத் தொட்டு மகிழ்ந்தேன்
டிஸ்கவரி
வேடியப்பனுக்கு நன்றி
‘அண்மையில் இஸ்ரேல்
இணையவெளியில் மேற்கொண்ட
முக்கிய முன்னெடுப்புதான்
இந்த நாவலுக்கு மூலம்’
என்றார் கபிலன்
யாரும்
வேட்டையாடாத காடுகளில்
வேலோடு நுழைகிறார்
‘இனி
எழுத்து எழுத்தாக மட்டுமே
வெற்றி பெறுவது
அத்துணை எளிதல்ல மகனே!
தொழில்நுட்பத்தோடு இயங்கி
ஒரு கூட்டுமதிப்பு
அடைகிறபோதுதான்
எழுத்துக்குச் சரியான
சந்தை கிடைக்கும்’ என்றேன்;
புரிந்துகொண்டார்
நேர்மையான ஒழுக்கமான
சலிக்காத உழைப்பு
மகன்மீது எனக்கு
மரியாதை கூட்டுகிறது
விரைவாய் நிறைவாய்
வளர்வாய் மகனே! என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}