சென்னை: தொழில்நுட்பத்தோடு இயங்கி ஒரு கூட்டுமதிப்பு அடைகிறபோதுதான் எழுத்துக்குச் சரியான சந்தை கிடைக்கும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கபிலன் வைரமுத்துவின் நாவலுக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். கபிலன் வைரமுத்து கவிஞர் வைரமுத்துவின் இளை மகன் ஆவர். கபிலன் வைரமுத்து ஒரு திரைப்பட பாடலாசிரியர். அதுமட்டும் இன்றி விவேகம், அசுரகுரு, சிங்கப்பெண்ணே, இந்தியன் 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

இவர் நாவல்கள் எழுதுவதிலும் வல்லவர். அத்துடன் சமூக ஆர்வலரும் கூட. இவர் எழுதிய ஆகோள் நாவலின் இரண்டாம் பாகத்திற்கு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வைரமுத்து கூறியுள்ளதாவது:
தம்பி கபிலன் வைரமுத்து
ஆகோள் நாவலின்
இரண்டாம் பாகம்
எழுதியிருக்கிறார்
‘மாக்கியவெல்லி காப்பியம்’
என்று பெயர் சூட்டியிருக்கிறார்
நாவலைத்
தொட்டுத் தொட்டு மகிழ்ந்தேன்
டிஸ்கவரி
வேடியப்பனுக்கு நன்றி
‘அண்மையில் இஸ்ரேல்
இணையவெளியில் மேற்கொண்ட
முக்கிய முன்னெடுப்புதான்
இந்த நாவலுக்கு மூலம்’
என்றார் கபிலன்
யாரும்
வேட்டையாடாத காடுகளில்
வேலோடு நுழைகிறார்
‘இனி
எழுத்து எழுத்தாக மட்டுமே
வெற்றி பெறுவது
அத்துணை எளிதல்ல மகனே!
தொழில்நுட்பத்தோடு இயங்கி
ஒரு கூட்டுமதிப்பு
அடைகிறபோதுதான்
எழுத்துக்குச் சரியான
சந்தை கிடைக்கும்’ என்றேன்;
புரிந்துகொண்டார்
நேர்மையான ஒழுக்கமான
சலிக்காத உழைப்பு
மகன்மீது எனக்கு
மரியாதை கூட்டுகிறது
விரைவாய் நிறைவாய்
வளர்வாய் மகனே! என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
செட்டிநாட்டு அடுப்படி.. காரசாரமான நான் வெஜ் சுவையில்.. அசத்தலான பலாக்காய் பிரட்டல்!
சோஷியல் மீடியா சமையல்ங்கிறது.. பார்க்குறப்போ ஆஹா... பண்ணி முடிச்ச அப்புறம் ஆத்தா!
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
ஆதிக்கம் செலுத்தும் ஏஐ.. மனிதர்களுக்கு இடையிலான உரையாடல்கள் குறைய ஆரம்பித்து விட்டதா?
தொகுதி மறுவரையறை.. அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!
Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?
{{comments.comment}}