தொழில்நுட்பத்தோடு இயங்கி கூட்டுமதிப்பு அடைகிறபோது எழுத்துக்குச் சந்தை கிடைக்கும்.. வைரமுத்து

Sep 30, 2024,02:47 PM IST

சென்னை:   தொழில்நுட்பத்தோடு இயங்கி ஒரு கூட்டுமதிப்பு அடைகிறபோதுதான் எழுத்துக்குச் சரியான சந்தை கிடைக்கும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.


கபிலன் வைரமுத்துவின் நாவலுக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். கபிலன் வைரமுத்து கவிஞர் வைரமுத்துவின் இளை மகன் ஆவர். கபிலன் வைரமுத்து ஒரு திரைப்பட பாடலாசிரியர். அதுமட்டும் இன்றி விவேகம், அசுரகுரு, சிங்கப்பெண்ணே, இந்தியன் 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.




இவர் நாவல்கள் எழுதுவதிலும் வல்லவர். அத்துடன் சமூக ஆர்வலரும் கூட. இவர் எழுதிய ஆகோள் நாவலின் இரண்டாம் பாகத்திற்கு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வைரமுத்து கூறியுள்ளதாவது:


தம்பி கபிலன் வைரமுத்து

ஆகோள் நாவலின்

இரண்டாம் பாகம்

எழுதியிருக்கிறார்


‘மாக்கியவெல்லி காப்பியம்’

என்று பெயர் சூட்டியிருக்கிறார்


நாவலைத்

தொட்டுத் தொட்டு மகிழ்ந்தேன்


டிஸ்கவரி

வேடியப்பனுக்கு நன்றி


‘அண்மையில் இஸ்ரேல்

இணையவெளியில் மேற்கொண்ட 

முக்கிய முன்னெடுப்புதான்

இந்த நாவலுக்கு மூலம்’ 

என்றார் கபிலன்


யாரும்

வேட்டையாடாத காடுகளில்

வேலோடு நுழைகிறார்


‘இனி 

எழுத்து எழுத்தாக மட்டுமே

வெற்றி பெறுவது

அத்துணை எளிதல்ல மகனே!


தொழில்நுட்பத்தோடு இயங்கி

ஒரு கூட்டுமதிப்பு

அடைகிறபோதுதான்

எழுத்துக்குச் சரியான

சந்தை கிடைக்கும்’ என்றேன்;

புரிந்துகொண்டார்


நேர்மையான ஒழுக்கமான

சலிக்காத உழைப்பு

மகன்மீது எனக்கு

மரியாதை கூட்டுகிறது


விரைவாய் நிறைவாய்

வளர்வாய் மகனே! என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?

news

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்

news

சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!

news

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ

அதிகம் பார்க்கும் செய்திகள்