தொழில்நுட்பத்தோடு இயங்கி கூட்டுமதிப்பு அடைகிறபோது எழுத்துக்குச் சந்தை கிடைக்கும்.. வைரமுத்து

Sep 30, 2024,02:47 PM IST

சென்னை:   தொழில்நுட்பத்தோடு இயங்கி ஒரு கூட்டுமதிப்பு அடைகிறபோதுதான் எழுத்துக்குச் சரியான சந்தை கிடைக்கும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.


கபிலன் வைரமுத்துவின் நாவலுக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். கபிலன் வைரமுத்து கவிஞர் வைரமுத்துவின் இளை மகன் ஆவர். கபிலன் வைரமுத்து ஒரு திரைப்பட பாடலாசிரியர். அதுமட்டும் இன்றி விவேகம், அசுரகுரு, சிங்கப்பெண்ணே, இந்தியன் 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.




இவர் நாவல்கள் எழுதுவதிலும் வல்லவர். அத்துடன் சமூக ஆர்வலரும் கூட. இவர் எழுதிய ஆகோள் நாவலின் இரண்டாம் பாகத்திற்கு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வைரமுத்து கூறியுள்ளதாவது:


தம்பி கபிலன் வைரமுத்து

ஆகோள் நாவலின்

இரண்டாம் பாகம்

எழுதியிருக்கிறார்


‘மாக்கியவெல்லி காப்பியம்’

என்று பெயர் சூட்டியிருக்கிறார்


நாவலைத்

தொட்டுத் தொட்டு மகிழ்ந்தேன்


டிஸ்கவரி

வேடியப்பனுக்கு நன்றி


‘அண்மையில் இஸ்ரேல்

இணையவெளியில் மேற்கொண்ட 

முக்கிய முன்னெடுப்புதான்

இந்த நாவலுக்கு மூலம்’ 

என்றார் கபிலன்


யாரும்

வேட்டையாடாத காடுகளில்

வேலோடு நுழைகிறார்


‘இனி 

எழுத்து எழுத்தாக மட்டுமே

வெற்றி பெறுவது

அத்துணை எளிதல்ல மகனே!


தொழில்நுட்பத்தோடு இயங்கி

ஒரு கூட்டுமதிப்பு

அடைகிறபோதுதான்

எழுத்துக்குச் சரியான

சந்தை கிடைக்கும்’ என்றேன்;

புரிந்துகொண்டார்


நேர்மையான ஒழுக்கமான

சலிக்காத உழைப்பு

மகன்மீது எனக்கு

மரியாதை கூட்டுகிறது


விரைவாய் நிறைவாய்

வளர்வாய் மகனே! என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி ஆனார் ம.நீ.ம கட்சி தலைவர் கமலஹாசன்!

news

அகமதாபாத்தில் விமான விபத்து... விடுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி?

news

அகமதாபாத் விமான விபத்து.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

news

அகமதாபாத்தில் விமான விபத்து...133 பேர் பலி... பயணிகளில் 169 பேர் இந்தியர்கள்.. ஏர் இந்தியா தகவல்!

news

விமான விபத்தில் சிக்கிய.. முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி எப்படி இருக்கிறார்?

news

அகமதாபாத்தில் பரபரப்பு.. ஏர்இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.. 200 பயணிகளின் நிலை என்ன?

news

காவல்துறை தரம்தாழ்ந்துவிட்டது... இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா?: சீமான்!

news

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம்

news

என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள்: டாக்டர் ராமதாஸ் வேதனை பேச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்