சென்னை: தொழில்நுட்பத்தோடு இயங்கி ஒரு கூட்டுமதிப்பு அடைகிறபோதுதான் எழுத்துக்குச் சரியான சந்தை கிடைக்கும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கபிலன் வைரமுத்துவின் நாவலுக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். கபிலன் வைரமுத்து கவிஞர் வைரமுத்துவின் இளை மகன் ஆவர். கபிலன் வைரமுத்து ஒரு திரைப்பட பாடலாசிரியர். அதுமட்டும் இன்றி விவேகம், அசுரகுரு, சிங்கப்பெண்ணே, இந்தியன் 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.
இவர் நாவல்கள் எழுதுவதிலும் வல்லவர். அத்துடன் சமூக ஆர்வலரும் கூட. இவர் எழுதிய ஆகோள் நாவலின் இரண்டாம் பாகத்திற்கு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வைரமுத்து கூறியுள்ளதாவது:
தம்பி கபிலன் வைரமுத்து
ஆகோள் நாவலின்
இரண்டாம் பாகம்
எழுதியிருக்கிறார்
‘மாக்கியவெல்லி காப்பியம்’
என்று பெயர் சூட்டியிருக்கிறார்
நாவலைத்
தொட்டுத் தொட்டு மகிழ்ந்தேன்
டிஸ்கவரி
வேடியப்பனுக்கு நன்றி
‘அண்மையில் இஸ்ரேல்
இணையவெளியில் மேற்கொண்ட
முக்கிய முன்னெடுப்புதான்
இந்த நாவலுக்கு மூலம்’
என்றார் கபிலன்
யாரும்
வேட்டையாடாத காடுகளில்
வேலோடு நுழைகிறார்
‘இனி
எழுத்து எழுத்தாக மட்டுமே
வெற்றி பெறுவது
அத்துணை எளிதல்ல மகனே!
தொழில்நுட்பத்தோடு இயங்கி
ஒரு கூட்டுமதிப்பு
அடைகிறபோதுதான்
எழுத்துக்குச் சரியான
சந்தை கிடைக்கும்’ என்றேன்;
புரிந்துகொண்டார்
நேர்மையான ஒழுக்கமான
சலிக்காத உழைப்பு
மகன்மீது எனக்கு
மரியாதை கூட்டுகிறது
விரைவாய் நிறைவாய்
வளர்வாய் மகனே! என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
{{comments.comment}}