தொழில்நுட்பத்தோடு இயங்கி கூட்டுமதிப்பு அடைகிறபோது எழுத்துக்குச் சந்தை கிடைக்கும்.. வைரமுத்து

Sep 30, 2024,02:47 PM IST

சென்னை:   தொழில்நுட்பத்தோடு இயங்கி ஒரு கூட்டுமதிப்பு அடைகிறபோதுதான் எழுத்துக்குச் சரியான சந்தை கிடைக்கும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.


கபிலன் வைரமுத்துவின் நாவலுக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். கபிலன் வைரமுத்து கவிஞர் வைரமுத்துவின் இளை மகன் ஆவர். கபிலன் வைரமுத்து ஒரு திரைப்பட பாடலாசிரியர். அதுமட்டும் இன்றி விவேகம், அசுரகுரு, சிங்கப்பெண்ணே, இந்தியன் 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.




இவர் நாவல்கள் எழுதுவதிலும் வல்லவர். அத்துடன் சமூக ஆர்வலரும் கூட. இவர் எழுதிய ஆகோள் நாவலின் இரண்டாம் பாகத்திற்கு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வைரமுத்து கூறியுள்ளதாவது:


தம்பி கபிலன் வைரமுத்து

ஆகோள் நாவலின்

இரண்டாம் பாகம்

எழுதியிருக்கிறார்


‘மாக்கியவெல்லி காப்பியம்’

என்று பெயர் சூட்டியிருக்கிறார்


நாவலைத்

தொட்டுத் தொட்டு மகிழ்ந்தேன்


டிஸ்கவரி

வேடியப்பனுக்கு நன்றி


‘அண்மையில் இஸ்ரேல்

இணையவெளியில் மேற்கொண்ட 

முக்கிய முன்னெடுப்புதான்

இந்த நாவலுக்கு மூலம்’ 

என்றார் கபிலன்


யாரும்

வேட்டையாடாத காடுகளில்

வேலோடு நுழைகிறார்


‘இனி 

எழுத்து எழுத்தாக மட்டுமே

வெற்றி பெறுவது

அத்துணை எளிதல்ல மகனே!


தொழில்நுட்பத்தோடு இயங்கி

ஒரு கூட்டுமதிப்பு

அடைகிறபோதுதான்

எழுத்துக்குச் சரியான

சந்தை கிடைக்கும்’ என்றேன்;

புரிந்துகொண்டார்


நேர்மையான ஒழுக்கமான

சலிக்காத உழைப்பு

மகன்மீது எனக்கு

மரியாதை கூட்டுகிறது


விரைவாய் நிறைவாய்

வளர்வாய் மகனே! என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்