கலைஞர்களின் நிஜமான நினைவிடம் என்பது மண்ணில் இல்லை.. மனசில்.. கவிஞர் வைரமுத்து

Jan 02, 2025,06:45 PM IST

சென்னை: நடித்து நடித்துச் சிரிக்க வைத்தவர்; கொடுத்துக் கொடுத்தே ஏழையானவர் கலைஞர்களின் நிஜமான நினைவிடம் என்பது மண்ணிலில்லை; மனசில் என்று மறைந்த கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வீடு பாழடைந்து போய்க் கிடப்பது குறித்து கவிஞர் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.


தமிழ் திரையுலகில் கலைவாணர் என அழைக்கப்பட்டவர்  என்.எஸ்.கிருஷ்ணன். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் பிறந்தவர். தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராகவும் பாடகராகவும் இருந்தவர். நகைச்சுவையில் பல சமூக சீர்திருத்தக் கருத்துக்களை புகுத்தி மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர். பிறர் மனதை புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாள்வதில் தனித்திறன் படைத்தவர். இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கியவர். 


இவரது பாணியைத்தான் பின்னாளில் நடிகர் விவேக் பின்பற்றி பல சமூகக் கருத்துக்களை தனது படங்களில் இடம் பெற வைத்தார். சின்னக் கலைவாணர் என்ற பெயரையும் பெற்றார். அத்தகைய பெருமைக்குரிய கலைவாணர் இல்லத்தை நேரில் சென்று பார்த்து விட்டு கவிஞர் வைரமுத்து தன எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,




கன்னியாகுமரி சென்று

வரும்வழியில்

என் நீண்டநாள் 

ஆசையொன்றை

நிறைவேற்றிக்கொண்டேன்


நாகர்கோயிலுக்குள் புகுந்து

ஒழுகினசேரி எங்கே

என்று விசாரித்தேன்


அங்கு வந்ததும்

கலைவாணர் வீடு எங்கே

என்று வினவினேன்


நான் காணவிரும்பிய

கலைவாணர் வீடு

கலைந்த கூடுபோல்

சிதைந்து கிடந்தது


1941இல் கட்டப்பட்டு

‘மதுரபவனம்’ என்று 

பெயரிடப்பட்ட மாளிகை

ஓர் உயரமான நோயாளியாக

உருமாறிக் கிடந்தது


இந்த மண்ணின்

பெருங்கலைஞர் கலைவாணர்


நடித்து நடித்துச்

சிரிக்க வைத்தவர்;

கொடுத்துக் கொடுத்தே

ஏழையானவர்


அந்த வளாகத்தில்

ஒரு நூற்றாண்டு நினைவுகள்

ஓடிக் கடந்தன


எத்துணை பெரிய

கனவின் மீதும்

காலம் ஒருநாள்

கல்லெறிகிறது


கலைஞர்களின்

நிஜமான நினைவிடம் என்பது

மண்ணிலில்லை;

மனசில் என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்