சென்னை: நடித்து நடித்துச் சிரிக்க வைத்தவர்; கொடுத்துக் கொடுத்தே ஏழையானவர் கலைஞர்களின் நிஜமான நினைவிடம் என்பது மண்ணிலில்லை; மனசில் என்று மறைந்த கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வீடு பாழடைந்து போய்க் கிடப்பது குறித்து கவிஞர் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கலைவாணர் என அழைக்கப்பட்டவர் என்.எஸ்.கிருஷ்ணன். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் பிறந்தவர். தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராகவும் பாடகராகவும் இருந்தவர். நகைச்சுவையில் பல சமூக சீர்திருத்தக் கருத்துக்களை புகுத்தி மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர். பிறர் மனதை புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாள்வதில் தனித்திறன் படைத்தவர். இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கியவர்.
இவரது பாணியைத்தான் பின்னாளில் நடிகர் விவேக் பின்பற்றி பல சமூகக் கருத்துக்களை தனது படங்களில் இடம் பெற வைத்தார். சின்னக் கலைவாணர் என்ற பெயரையும் பெற்றார். அத்தகைய பெருமைக்குரிய கலைவாணர் இல்லத்தை நேரில் சென்று பார்த்து விட்டு கவிஞர் வைரமுத்து தன எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

கன்னியாகுமரி சென்று
வரும்வழியில்
என் நீண்டநாள்
ஆசையொன்றை
நிறைவேற்றிக்கொண்டேன்
நாகர்கோயிலுக்குள் புகுந்து
ஒழுகினசேரி எங்கே
என்று விசாரித்தேன்
அங்கு வந்ததும்
கலைவாணர் வீடு எங்கே
என்று வினவினேன்
நான் காணவிரும்பிய
கலைவாணர் வீடு
கலைந்த கூடுபோல்
சிதைந்து கிடந்தது
1941இல் கட்டப்பட்டு
‘மதுரபவனம்’ என்று
பெயரிடப்பட்ட மாளிகை
ஓர் உயரமான நோயாளியாக
உருமாறிக் கிடந்தது
இந்த மண்ணின்
பெருங்கலைஞர் கலைவாணர்
நடித்து நடித்துச்
சிரிக்க வைத்தவர்;
கொடுத்துக் கொடுத்தே
ஏழையானவர்
அந்த வளாகத்தில்
ஒரு நூற்றாண்டு நினைவுகள்
ஓடிக் கடந்தன
எத்துணை பெரிய
கனவின் மீதும்
காலம் ஒருநாள்
கல்லெறிகிறது
கலைஞர்களின்
நிஜமான நினைவிடம் என்பது
மண்ணிலில்லை;
மனசில் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!
நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!
சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?
டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ
புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி - அன்பழகன் நம்பிக்கை
{{comments.comment}}