சென்னை: நடித்து நடித்துச் சிரிக்க வைத்தவர்; கொடுத்துக் கொடுத்தே ஏழையானவர் கலைஞர்களின் நிஜமான நினைவிடம் என்பது மண்ணிலில்லை; மனசில் என்று மறைந்த கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வீடு பாழடைந்து போய்க் கிடப்பது குறித்து கவிஞர் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கலைவாணர் என அழைக்கப்பட்டவர் என்.எஸ்.கிருஷ்ணன். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் பிறந்தவர். தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராகவும் பாடகராகவும் இருந்தவர். நகைச்சுவையில் பல சமூக சீர்திருத்தக் கருத்துக்களை புகுத்தி மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர். பிறர் மனதை புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாள்வதில் தனித்திறன் படைத்தவர். இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கியவர்.
இவரது பாணியைத்தான் பின்னாளில் நடிகர் விவேக் பின்பற்றி பல சமூகக் கருத்துக்களை தனது படங்களில் இடம் பெற வைத்தார். சின்னக் கலைவாணர் என்ற பெயரையும் பெற்றார். அத்தகைய பெருமைக்குரிய கலைவாணர் இல்லத்தை நேரில் சென்று பார்த்து விட்டு கவிஞர் வைரமுத்து தன எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

கன்னியாகுமரி சென்று
வரும்வழியில்
என் நீண்டநாள்
ஆசையொன்றை
நிறைவேற்றிக்கொண்டேன்
நாகர்கோயிலுக்குள் புகுந்து
ஒழுகினசேரி எங்கே
என்று விசாரித்தேன்
அங்கு வந்ததும்
கலைவாணர் வீடு எங்கே
என்று வினவினேன்
நான் காணவிரும்பிய
கலைவாணர் வீடு
கலைந்த கூடுபோல்
சிதைந்து கிடந்தது
1941இல் கட்டப்பட்டு
‘மதுரபவனம்’ என்று
பெயரிடப்பட்ட மாளிகை
ஓர் உயரமான நோயாளியாக
உருமாறிக் கிடந்தது
இந்த மண்ணின்
பெருங்கலைஞர் கலைவாணர்
நடித்து நடித்துச்
சிரிக்க வைத்தவர்;
கொடுத்துக் கொடுத்தே
ஏழையானவர்
அந்த வளாகத்தில்
ஒரு நூற்றாண்டு நினைவுகள்
ஓடிக் கடந்தன
எத்துணை பெரிய
கனவின் மீதும்
காலம் ஒருநாள்
கல்லெறிகிறது
கலைஞர்களின்
நிஜமான நினைவிடம் என்பது
மண்ணிலில்லை;
மனசில் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}