மக்களே மறந்துடாதீங்க.. மார்ச் 3ம் தேதி போலியோ சிறப்பு முகாம்.. குட்டீஸ்களை கூட்டிட்டு போய்ருங்க!

Feb 21, 2024,03:32 PM IST

சென்னை: தமிழகம் முழுவதும், ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3ம் தேதி நடைபெறுகிறது. 


தமிழகம் முழுவதும் போலியோ தடுப்பு மருந்துவ முகாம் வருகின்ற மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.




போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது தான் போலியோ தடுப்பு முகாம். தமிழக அரசு சார்பில் வருடத்திற்கு இரண்டு முறை இந்த முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதனால் போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியது.


கடந்த 4 ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 43,051 இடங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளின் மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனை சாவடிகளில் நடமாடும் வாகனம் மூலம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த முகாமில் பங்கேற்று தங்களது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாது போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளும் படி பெற்றோர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்