பொங்கல் பண்டிகை...சிறப்புப் பேருந்துகள் மூலம் 1.21 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்

Jan 10, 2026,11:23 AM IST

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்டு வரும் சிறப்புப் பேருந்துகள் மூலம் இதுவரை சுமார் 1.21 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தின் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையைக் கொண்டாட, சென்னையில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தடையற்ற பயணத்தை உறுதி செய்யவும் தமிழக அரசு மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.




இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 9-ம் தேதி நள்ளிரவு வரையிலான புள்ளிவிவரங்களின்படி, திட்டமிடப்பட்ட 2,092 வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 614 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,706 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் 1 லட்சத்து 21 ஆயிரம் பயணிகள் இதுவரை பயணம் மேற்கொண்டுள்ளனர்.


சென்னையிலிருந்து மட்டும் சுமார் 1.16 லட்சம் பயணிகள் முன்கூட்டியே தங்களது பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். பண்டிகை நெருங்குவதால் வரும் நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குத் தகுந்தாற்போல், தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துத் துறை தயார் நிலையில் உள்ளது.


முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்: 


கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கவும், சிரமமின்றி பயணம் செய்யவும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளுமாறு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். குறிப்பாக, கிளாம்பாக்கம் (Kalaignar Centenary Bus Terminus), கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்குப் பேருந்துகள் பிரித்து இயக்கப்படுவதால், பயணிகள் சரியான இடத்திற்குச் சென்று பேருந்துகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!

news

பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு

news

திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்...கோபண்ணா நம்பிக்கை

news

இது தான் சட்ட ஒழுங்கு தரமா?...நாங்குநேரி படுகொலை...திமுக.,வை விளாசிய விஜய்

news

ராஜ்ய சபா எம்பி ஆகிறார் நிதின் நபீன்: பாஜகவின் இளம் தேசிய தலைவர் பீகாரிலிருந்து தேர்வு

news

திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? முதல்வர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை

news

இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு...டெல்லி பாஜக அலுவலகத்தில் நடந்தது என்ன?

news

திமுக - காங்கிரஸ் கூட்டணி: இழுபறிக்கு இடையில் இன்று முக்கிய அறிவிப்பு?

news

தடையினை உடைத்திடு

அதிகம் பார்க்கும் செய்திகள்