பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் அரசு விடுமுறை... ஜனவரி 17ம் தேதி லீவு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Jan 04, 2025,07:14 PM IST

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.


2025ம் ஆண்டில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக ஏற்கனவே தெற்கு ரயில்வே ஏராளமான சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது.


இந்நிலையில் அனைவரும் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடுவதற்கு வசதியாக ஜனவரி 13ம் தேதி போகிப் பண்டிகை, ஜனவரி 14 ம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 15ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 16 காணும் பொங்கலுக்காக அரசு விடுமுறை விடப்படுவதாக ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.




இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வருவதற்கு வசதியாக ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறையாக அறிவிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 நாட்கள் அரசு விடுமுறை கிடைத்துள்ளது. 


ஜனவரி 17ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 25ம் தேதி வேலை நாளாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கேப்பே இல்லாமல் பண்டிகையைக் கொண்டாடும் வாய்ப்பு அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் கிடைத்துள்ளது. பிறகென்ன மக்களே.. ஜாலியா ஊருக்குப் போய் பொங்கலைக் கொண்டாடிட்டு ஜம்முன்னு திரும்பி வாங்க.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்