- பா. பானுமதி
ஒரு பொங்கல் திருநாளில் நாம் சந்தித்தோம்....
உன் கண்களில் புத்துணர்ச்சி பொங்கியது
என் கண்களில் புது உணர்ச்சி தங்கியது
வார்த்தைகள் பின் வாங்கியது
வசீகரமே முன்னோங்கியது
கரும்பாய் இனித்தது
உன் வாய் சொற்கள்
வெல்லமாய் இருந்தது
உன் வேலைகள் சூரியனாய் என்னை சுட்டெரிக்க
தொடர்ந்து வந்தேன்
துணை வேண்டி நின்றேன்
நாளும் வேளையும் கூடி வர
பொங்கல் திருநாள் நம் மண நாளாகியது
முதல் பொங்கல் மூச்சிரைக்க இனிமை கொட்டியது
அடுத்த பொங்கல் அற்புதமாய் அமைந்தது
தொடர்ந்த பொங்கல்கள் என்னை தூக்கி தெறிக்க வைத்தது
இதோ ஒரு பொங்கல் வருகிறது...
தினமும் என்னை பொங்க வைக்கிறது
புறப்பட்டு வருகிறாயா பொங்கலே
உனக்கு போக்கிடம் இல்லையா
இப்படி பொங்க வைக்கிறாயே
உனக்கு இரக்கமே இல்லையா
கரும்பு கசக்கிறது
வெல்லம் இளிக்கிறது
சூரியன் சுடுகிறான் !
மகாலட்சுமியின் வடிவம்.. பூமாதேவியின் அம்சம்..வராகி அம்மன் சிறப்புகள்!
ஜனநாயகன் இழுபறி தொடர்கிறது.. பாரசக்திக்கு யுஏ கிடைத்தது.. திட்டமிட்டபடி நாளை ரிலீஸ்!
பொங்கலுக்கு ரூ.3000 கொடுக்க...விவசாயிகளின் பயிர்க் கடன் பணத்தை மடைமாற்றிய திமுக அரசு: அண்ணாமலை
யாருடன் கூட்டணி?...நாளை முடிவெடுக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்
GOLD RATE:தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு... வெள்ளி கிராமிற்கு ரூ.4 குறைவு!
தேசியக் கட்சிகள் இல்லாமல் திராவிடக் கட்சிகளால் ஜெயிக்க முடியாதா??
காலை உணவு சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது? ஏன்?
ஜனநாயகன் பட தீர்ப்பை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு யு/ஏ சான்று...சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
{{comments.comment}}