இப்படிப் பொங்க வைக்கிறாயே!

Jan 08, 2026,03:52 PM IST

- பா. பானுமதி


ஒரு பொங்கல் திருநாளில் நாம் சந்தித்தோம்....

உன் கண்களில் புத்துணர்ச்சி பொங்கியது 

என் கண்களில் புது உணர்ச்சி தங்கியது 

வார்த்தைகள் பின் வாங்கியது 

வசீகரமே முன்னோங்கியது 

கரும்பாய் இனித்தது 

உன் வாய் சொற்கள் 

வெல்லமாய் இருந்தது  

உன் வேலைகள் சூரியனாய் என்னை சுட்டெரிக்க 

தொடர்ந்து வந்தேன் 




துணை வேண்டி நின்றேன் 

நாளும் வேளையும் கூடி வர 

பொங்கல் திருநாள் நம் மண நாளாகியது

முதல் பொங்கல் மூச்சிரைக்க இனிமை கொட்டியது 

அடுத்த பொங்கல் அற்புதமாய் அமைந்தது 

தொடர்ந்த பொங்கல்கள் என்னை தூக்கி தெறிக்க வைத்தது 

இதோ ஒரு பொங்கல் வருகிறது... 

தினமும் என்னை பொங்க வைக்கிறது 

புறப்பட்டு வருகிறாயா பொங்கலே 

உனக்கு போக்கிடம் இல்லையா 

இப்படி பொங்க வைக்கிறாயே 

உனக்கு இரக்கமே இல்லையா 

கரும்பு கசக்கிறது 

வெல்லம் இளிக்கிறது 

சூரியன் சுடுகிறான் !

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்