- பா. பானுமதி
ஒரு பொங்கல் திருநாளில் நாம் சந்தித்தோம்....
உன் கண்களில் புத்துணர்ச்சி பொங்கியது
என் கண்களில் புது உணர்ச்சி தங்கியது
வார்த்தைகள் பின் வாங்கியது
வசீகரமே முன்னோங்கியது
கரும்பாய் இனித்தது
உன் வாய் சொற்கள்
வெல்லமாய் இருந்தது
உன் வேலைகள் சூரியனாய் என்னை சுட்டெரிக்க
தொடர்ந்து வந்தேன்
துணை வேண்டி நின்றேன்
நாளும் வேளையும் கூடி வர
பொங்கல் திருநாள் நம் மண நாளாகியது
முதல் பொங்கல் மூச்சிரைக்க இனிமை கொட்டியது
அடுத்த பொங்கல் அற்புதமாய் அமைந்தது
தொடர்ந்த பொங்கல்கள் என்னை தூக்கி தெறிக்க வைத்தது
இதோ ஒரு பொங்கல் வருகிறது...
தினமும் என்னை பொங்க வைக்கிறது
புறப்பட்டு வருகிறாயா பொங்கலே
உனக்கு போக்கிடம் இல்லையா
இப்படி பொங்க வைக்கிறாயே
உனக்கு இரக்கமே இல்லையா
கரும்பு கசக்கிறது
வெல்லம் இளிக்கிறது
சூரியன் சுடுகிறான் !
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}