இப்படிப் பொங்க வைக்கிறாயே!

Jan 08, 2026,03:52 PM IST

- பா. பானுமதி


ஒரு பொங்கல் திருநாளில் நாம் சந்தித்தோம்....

உன் கண்களில் புத்துணர்ச்சி பொங்கியது 

என் கண்களில் புது உணர்ச்சி தங்கியது 

வார்த்தைகள் பின் வாங்கியது 

வசீகரமே முன்னோங்கியது 

கரும்பாய் இனித்தது 

உன் வாய் சொற்கள் 

வெல்லமாய் இருந்தது  

உன் வேலைகள் சூரியனாய் என்னை சுட்டெரிக்க 

தொடர்ந்து வந்தேன் 




துணை வேண்டி நின்றேன் 

நாளும் வேளையும் கூடி வர 

பொங்கல் திருநாள் நம் மண நாளாகியது

முதல் பொங்கல் மூச்சிரைக்க இனிமை கொட்டியது 

அடுத்த பொங்கல் அற்புதமாய் அமைந்தது 

தொடர்ந்த பொங்கல்கள் என்னை தூக்கி தெறிக்க வைத்தது 

இதோ ஒரு பொங்கல் வருகிறது... 

தினமும் என்னை பொங்க வைக்கிறது 

புறப்பட்டு வருகிறாயா பொங்கலே 

உனக்கு போக்கிடம் இல்லையா 

இப்படி பொங்க வைக்கிறாயே 

உனக்கு இரக்கமே இல்லையா 

கரும்பு கசக்கிறது 

வெல்லம் இளிக்கிறது 

சூரியன் சுடுகிறான் !

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்