இப்படிப் பொங்க வைக்கிறாயே!

Jan 08, 2026,03:52 PM IST

- பா. பானுமதி


ஒரு பொங்கல் திருநாளில் நாம் சந்தித்தோம்....

உன் கண்களில் புத்துணர்ச்சி பொங்கியது 

என் கண்களில் புது உணர்ச்சி தங்கியது 

வார்த்தைகள் பின் வாங்கியது 

வசீகரமே முன்னோங்கியது 

கரும்பாய் இனித்தது 

உன் வாய் சொற்கள் 

வெல்லமாய் இருந்தது  

உன் வேலைகள் சூரியனாய் என்னை சுட்டெரிக்க 

தொடர்ந்து வந்தேன் 




துணை வேண்டி நின்றேன் 

நாளும் வேளையும் கூடி வர 

பொங்கல் திருநாள் நம் மண நாளாகியது

முதல் பொங்கல் மூச்சிரைக்க இனிமை கொட்டியது 

அடுத்த பொங்கல் அற்புதமாய் அமைந்தது 

தொடர்ந்த பொங்கல்கள் என்னை தூக்கி தெறிக்க வைத்தது 

இதோ ஒரு பொங்கல் வருகிறது... 

தினமும் என்னை பொங்க வைக்கிறது 

புறப்பட்டு வருகிறாயா பொங்கலே 

உனக்கு போக்கிடம் இல்லையா 

இப்படி பொங்க வைக்கிறாயே 

உனக்கு இரக்கமே இல்லையா 

கரும்பு கசக்கிறது 

வெல்லம் இளிக்கிறது 

சூரியன் சுடுகிறான் !

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்