கட்ட பஞ்சாயத்து செய்யவா மக்கள் ஓட்டு போட்டார்கள்? பூவை ஜெகன் மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

Jun 16, 2025,06:23 PM IST

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் "கட்டப்பஞ்சாயத்து செய்யவா மக்கள் உங்களை ஓட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள்" என்று புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்திக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார்.  இந்த விவகாரத்தில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான  பூவை ஜெகன் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள பூவை ஜெகன் மூர்த்தி முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன் மூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் இந்த கடத்தல் வழக்கிற்கும், ஜெகன் மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார். 




இதனைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், இந்த வழக்கில் 5  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் பூவை ஜெகன் மூர்த்தியின் பங்கு குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கடத்தப்பட்ட சிறுவன் ஏடிஜிபி ஜெயராமனின் காரில் திரும்பக் கொண்டு வந்து விடப்பட்டதாகவும் குறிப்பிட்டார். எனவே இந்த கடத்தலுக்கும் ஏடிஜிபிக்கும் உள்ள தொடர்பு குறித்து பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டும். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்திலிருந்து 7 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக பிற்பகல்  ஆஜராகும்படி பூவை ஜெகன் மூர்த்திக்கும், ஏடிஜிபி ஜெயராமனுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி ஆஜரானார். இதை அடுத்து இந்த வழக்கில் ஏன் ஏடிஜிபி மீது வழக்கு பதிவு செய்யவில்லை. கட்டப்பஞ்சாயத்து செய்ய தான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்களா என பூவை ஜெகன் மூர்த்தியிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும். ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து காவல் துறை பாதுகாப்பில் வைக்க நீதிபதி வேல்முருகன் ஆணையிட்டார்.


மேலும் சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் 26க்கு தள்ளிவைத்த நீதிபதி, விசாரணைக்கு தனியாக செல்ல வேண்டும் என்றும் முழு ஒத்துழைப்பு தருமாறும்  பூவை ஜெகன் மூர்த்திக்கும் உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கடும் பனிமூட்டம்...டெல்லிக்கு ரெட் அலர்ட்

news

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

news

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

news

அஜித்தை அடுத்து இயக்க போவது இவர் தானாமே...கதையையும் இப்பவே சொல்லிட்டாரே

news

விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்

news

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!

news

கண்ணாடியே.. நான் வந்து நிற்கிறேன் உன் முன்னாடியே.. CONVERSATION WITH THE MIRROR!!

news

துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்...பொங்கல் பண்டிகை முதல் துவக்கம்

news

சற்று குறைந்தது தங்கம் விலை... தங்கம் மட்டும் இல்லங்க வெள்ளியும் இன்று குறைவு தான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்