திடீரென.. சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்த பிரஷாந்த் கிஷோர்... அப்ப ஜெகன்மோகன் ரெட்டி கதி?

Dec 24, 2023,11:48 AM IST

விஜயவாடா: ஐபேக் நிறுவனரும், பிரபல அரசியல் உத்தி வகுப்பாளருமான பிரஷாந்த் கிஷோர் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம், ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டியின்,  உத்தி வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் நிறுவனம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில்தான் தெலங்கானா மாநில சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. இன்னும் நான்கு மாதங்களில் ஆந்திர மாநில சட்டசபைக்கு தேர்தல் வரவுள்ளது. 


கடந்த 2019ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றினார் பிரஷாந்த் கிஷோர். இதில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று முதல்வரானார் ஜெகன் மோகன் ரெட்டி. சந்திரபாபு நாயுடு பெரும் தோல்வியைத் தழுவினார். 




இந்த நிலையில் திடீரென நேற்று தனி விமானம் மூலம் விஜயவாடாவுக்குச் சென்றார் பிரஷாந்த் கிஷோர். அவருடன் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷும், மேலும் 3 பேரும் உடன் சென்றனர். அதில் ஒருவர் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்திலிருந்து விலகி ராபின் சர்மா உருவாக்கிய ஷோடைம் கன்சல்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். இந்த ஷோடைம் நிறுவனம்தான் தெலுங்கு தேசம் கட்சிக்காக பணியாற்றி வருகிறது.


சந்திரபாபு நாயுடுவை பிரஷாந்த் கிஷோர் ஏன் சந்தித்தார் என்று தெரியவில்லை. இந்த நிலையில் ஆந்திர மாநில ஐபேக் ஒரு டிவீட் போட்டுள்ளது. அதில், ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி 2024ம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்டும். அதை உறுதி செய்வதில் ஐபேக் உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளது.


பிரஷாந்த் கிஷோர் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு பல்வேறு கேள்விகளையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல முக்கியமான தேர்தல் முடிவுகளை நிர்ணயித்ததில் பிரஷாந்த் கிஷோருக்கு முக்கியப் பங்கு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக 2014 தேர்தலில் வெற்றி பெற பிரஷாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த திட்டங்கள்தான் காரணம். அதேபோல நிதீஷ் குமாருக்கும் ஆலோசகராக இருந்துள்ளார் கிஷோர். மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜிக்காக பணியாற்றியுள்ளார்.


தமிழ்நாட்டில் 10 வருடமாக இருந்து வந்த அதிமுக ஆட்சியை வீழ்த்தி, திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறவும் அவர் உத்திகள் வகுத்துக் கொடுத்து தீவிரமாக செயல்பட்டார். இதன் மூலம் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தார்.


மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு ஜன் சுராஜ் என்ற அமைப்பை உருவாக்கினார். பீகாரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தனது அமைப்பை கட்சியாக மாற்றவும் திட்டமிட்டுள்ளார்.  இருப்பினும் தான் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவில் அவர் இருக்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

news

டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!

news

இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்டு.. தரையில் கிடத்தி.. அமெரிக்க விமான நிலையத்தில் அராஜகம்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்