- அ.சீ.லாவண்யா
வேலூர்: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாளை (டிசம்பர் 17) தமிழகம் வருகை தர உள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பொற்கோவிலில் அவர் வழிபாடு மேற்கொள்ள உள்ளார்.
இதனால் வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. முக்கியமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தும் மற்றும் ஸ்ரீபுரம் கோவிலின் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பாதுகாப்பும் அமைக்கப்பட்டுள்ளது.
காவலர்கள், சிறப்பு பாதுகாப்புப் படைகள் மற்றும் கண்காணிப்பு போன்ற தீவிர பாதுகாப்பு படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குழுக்கள் அமைக்கபட்டுள்ளன.

முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் கிசி டிவி கேமராகள் பொருத்தப்பட்டும் மற்றும் கண்காணிப்பும் அதிகளவில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் செய்து வருகின்றன.
பொற்கோவில் வளாகத்தில் பாதுகாப்பு காரணங்களால் பொதுமக்கள் நுழைவுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் வருகை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
சென்னையில் காலை நேரப் பனிமூட்டம் நீடிக்கும்...சென்னை வானிலை மையம் தகவல்
திமுக.,வின் அடுத்த தலைவர் உதயநிதியா?...முதல்வர் பேசியதற்கு என்ன அர்த்தம்?
செங்கோட்டையன் செல்லாத நோட்டு... விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார்: செல்லூர் ராஜூ பேட்டி
வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!
விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்...செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு
பாமக யாருக்கு? அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் வழங்கி வழக்கு முடித்து வைப்பு
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக திமுக எம்.பி., திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி
ஜனநாயகன் படத்திற்கு புதிய சிக்கல்: மறுதணிக்கைக்கு அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு
{{comments.comment}}