"இது ரொம்ப ஸ்பெஷல்".. பிரதமர் நரேந்திர மோடி எடுத்த சூப்பர் செல்ஃபி!

Apr 09, 2023,10:15 AM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய சென்னை பயணத்தின் நிறைவாக எடுத்த ஒரு செல்ஃபி பலரையும் நெகிழ வைத்து விட்டது.

செல்ஃபி எடுப்பது என்பது பலருக்கும் ஹாபியாகி விட்டது. எதற்கெடுத்தாலும் செல்ஃபி.. எந்த இடத்தில் இருந்தாலும் செல்ஃபி.. எப்போது பார்த்தாலும் செல்ஃபி என்று நிலைமை மாறிப் போய் விட்டது.  இப்படிப்பட்ட நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி எடுத்த ஒரு செல்ஃபி அனைவரையும் உருக வைத்துள்ளது. 



பிரதமர் நரேந்திர மோடி செல்ஃபி எடுப்பது புதிதல்ல. இதற்கு முன்பும் கூட நிறைய செல்ஃபி எடுத்துள்ளார். விதம் விதமான மனிதர்கள், தலைவர்களுடன் அவர் நிறைய செல்ஃபி எடுத்துள்ளார். ஆனால் நேற்று எடுத்தது விசேஷமாகி விட்டது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிற்பகல் சென்னை வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு இரவு அவர் கிளம்பிச் சென்றார். தனது சென்னை பயணத்தின் நிறைவாக அவர் ஒரு வித்தியாசமான பாஜக தொண்டரைச் சந்தித்தார். விமான நிலையத்திற்கு வந்திருந்த அந்த பாஜக தொண்டரின் பெயர் மணிகண்டன். சக்கர நாற்காலியில் வந்திருந்த மணிகண்டன் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார்.

தீவிர பாஜக தொண்டரான அவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். கடை வைத்து நடத்தி வருகிறார். அப்பகுதியில் பூத் கமிட்டி தலைவராக இருக்கிறார். தனது கடையில் வரும் வருமானத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்து கட்சிக்காக செலவழிப்பாராம் மணிகண்டன். இப்படிப்பட்ட தொண்டரைச் சந்திப்பது பெருமையாக இருப்பதாக பின்னர் தனது டிவீட்டில் கூறியிருந்தார் பிரதமர் மோடி.




பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டிருந்த அந்த டிவீட்டில், ஒரு சிறப்பு செல்ஃபி... சென்னையில் எஸ்.மணிகண்டனை சந்தித்தேன்.  அவர் ஈரோட்டை சேர்ந்த ஒரு பெருமைமிக்க பாஜக  கட்சிக்காரர். பூத் நிலை முகவராக இருக்கிறார். அவர் ஒரு மாற்றுத்திறனாளி, சொந்தமாக கடை நடத்துகிறார், மேலும் ஊக்கமளிக்கும் அம்சம் என்னவென்றால் - அவர் தனது தினசரி லாபத்தில் கணிசமான பகுதியை பாஜகவுக்குக் கொடுக்கிறார்.

எஸ்.மணிகண்டன் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன்.  அவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் நமது கட்சி, நமது சித்தாந்தத்தின் மீதான அவரது உறுதி அனைவரையும் ஊக்குவிக்கிறது.  அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

சக்கர நாற்காலில் அமர்ந்திருந்த மணிகண்டன் அருகில் குணிந்து நின்று பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக எடுத்துக் கொண்ட அந்த செல்ஃபியை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்