"இது ரொம்ப ஸ்பெஷல்".. பிரதமர் நரேந்திர மோடி எடுத்த சூப்பர் செல்ஃபி!

Apr 09, 2023,10:15 AM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய சென்னை பயணத்தின் நிறைவாக எடுத்த ஒரு செல்ஃபி பலரையும் நெகிழ வைத்து விட்டது.

செல்ஃபி எடுப்பது என்பது பலருக்கும் ஹாபியாகி விட்டது. எதற்கெடுத்தாலும் செல்ஃபி.. எந்த இடத்தில் இருந்தாலும் செல்ஃபி.. எப்போது பார்த்தாலும் செல்ஃபி என்று நிலைமை மாறிப் போய் விட்டது.  இப்படிப்பட்ட நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி எடுத்த ஒரு செல்ஃபி அனைவரையும் உருக வைத்துள்ளது. 



பிரதமர் நரேந்திர மோடி செல்ஃபி எடுப்பது புதிதல்ல. இதற்கு முன்பும் கூட நிறைய செல்ஃபி எடுத்துள்ளார். விதம் விதமான மனிதர்கள், தலைவர்களுடன் அவர் நிறைய செல்ஃபி எடுத்துள்ளார். ஆனால் நேற்று எடுத்தது விசேஷமாகி விட்டது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிற்பகல் சென்னை வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு இரவு அவர் கிளம்பிச் சென்றார். தனது சென்னை பயணத்தின் நிறைவாக அவர் ஒரு வித்தியாசமான பாஜக தொண்டரைச் சந்தித்தார். விமான நிலையத்திற்கு வந்திருந்த அந்த பாஜக தொண்டரின் பெயர் மணிகண்டன். சக்கர நாற்காலியில் வந்திருந்த மணிகண்டன் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார்.

தீவிர பாஜக தொண்டரான அவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். கடை வைத்து நடத்தி வருகிறார். அப்பகுதியில் பூத் கமிட்டி தலைவராக இருக்கிறார். தனது கடையில் வரும் வருமானத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்து கட்சிக்காக செலவழிப்பாராம் மணிகண்டன். இப்படிப்பட்ட தொண்டரைச் சந்திப்பது பெருமையாக இருப்பதாக பின்னர் தனது டிவீட்டில் கூறியிருந்தார் பிரதமர் மோடி.




பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டிருந்த அந்த டிவீட்டில், ஒரு சிறப்பு செல்ஃபி... சென்னையில் எஸ்.மணிகண்டனை சந்தித்தேன்.  அவர் ஈரோட்டை சேர்ந்த ஒரு பெருமைமிக்க பாஜக  கட்சிக்காரர். பூத் நிலை முகவராக இருக்கிறார். அவர் ஒரு மாற்றுத்திறனாளி, சொந்தமாக கடை நடத்துகிறார், மேலும் ஊக்கமளிக்கும் அம்சம் என்னவென்றால் - அவர் தனது தினசரி லாபத்தில் கணிசமான பகுதியை பாஜகவுக்குக் கொடுக்கிறார்.

எஸ்.மணிகண்டன் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன்.  அவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் நமது கட்சி, நமது சித்தாந்தத்தின் மீதான அவரது உறுதி அனைவரையும் ஊக்குவிக்கிறது.  அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

சக்கர நாற்காலில் அமர்ந்திருந்த மணிகண்டன் அருகில் குணிந்து நின்று பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக எடுத்துக் கொண்ட அந்த செல்ஃபியை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

முதல் போட்டியிலேயே... ஹைதராபாத்தைப் புடைத்தெடுத்து.. வெற்றியைத் துடைத்து எடுத்த ஆர்சிபி

news

கொளத்தூர் மு.க.ஸ்டாலின்.. காட்பாடி துரைமுருகன் .. திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

news

பெரம்பூரில் திமுக போட்டி.. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளும் அறிவிப்பு

news

PTR Palanivel Thiagarajan Vs Sundar C: மதுரையின் அடையாளத்துடன் மோதும் ஈரோட்டு சிங்கம்!

news

எல்பிஜியை விடுங்க.. சான்ஸ் இருந்தால் பிஎன்ஜிக்கு மாறிடுங்க.. பெஸ்ட்!

news

ஐபிஎல் 2026: சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. 2 வாரங்களுக்கு எம்.எஸ். தோனி விளையாட மாட்டார்!

news

Iran War: 850 ஏவுகணைகள் காலி.. அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு காலியாகிறதா?

news

Respect Your Cat Day: பூனைதானே.. அப்படின்னு நினைக்காதீங்க.. அவங்களையும் மதிக்கணும்!

news

அசைஞ்சு வரும் தேரு.. அது எங்கு ஆழித் தேர்.. தேரோட்டத்திற்குத் தயாராகும் திருவாரூர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்