டெல்லி: யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெறக் கோரி திமுக மாணவர் அணி சார்பில் இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்தில் யுஜிசி பல்கலைக்கழகம், துணைவேந்தர் நியமனம், ஆசிரியர் நியமனம், மற்றும் உயர் கல்வியின் தரத்தை பராமரித்தல் போன்றவைக்கான புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டது. யுஜிசியின் இந்த புதிய வரைவு அறிக்கை கல்வியில் மாநில உரிமைகளை நிராகரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு தமிழகம்,கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதே சமயத்தில் இந்த புதிய வரைவு அறிக்கையை திரும்பப் பெறக் கோரி வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இதில் யூஜிசி வரைவு கொள்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த புதிய வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மாணவரணியின் சார்பில் 6.02.2025 அன்று திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவார்கள் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே இந்த புதிய விதிமுறைகள் மாநில உரிமைகளை நிராகரிப்பது மட்டுமல்லாமல் இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி தத்துவத்தையே கேள்விக்குறியாக்குகிறது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.அதே போல் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மாநில உரிமைகளை பறித்து வருகிறது எனவும் திமுக மாணவரணி தலைவர் எழிலரசன் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெறக் கோரி இன்று டெல்லியில் ஜந்தர் மந்திரில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாணவரணி தலைவர் எழிலரசன் தலைமையில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல இந்தியா கூட்டணியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 16, 2025... இன்று பணம் தாராளமாக வரும்
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
{{comments.comment}}