டெல்லி: யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெறக் கோரி திமுக மாணவர் அணி சார்பில் இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்தில் யுஜிசி பல்கலைக்கழகம், துணைவேந்தர் நியமனம், ஆசிரியர் நியமனம், மற்றும் உயர் கல்வியின் தரத்தை பராமரித்தல் போன்றவைக்கான புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டது. யுஜிசியின் இந்த புதிய வரைவு அறிக்கை கல்வியில் மாநில உரிமைகளை நிராகரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு தமிழகம்,கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதே சமயத்தில் இந்த புதிய வரைவு அறிக்கையை திரும்பப் பெறக் கோரி வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இதில் யூஜிசி வரைவு கொள்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த புதிய வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மாணவரணியின் சார்பில் 6.02.2025 அன்று திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவார்கள் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே இந்த புதிய விதிமுறைகள் மாநில உரிமைகளை நிராகரிப்பது மட்டுமல்லாமல் இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி தத்துவத்தையே கேள்விக்குறியாக்குகிறது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.அதே போல் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மாநில உரிமைகளை பறித்து வருகிறது எனவும் திமுக மாணவரணி தலைவர் எழிலரசன் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெறக் கோரி இன்று டெல்லியில் ஜந்தர் மந்திரில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாணவரணி தலைவர் எழிலரசன் தலைமையில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல இந்தியா கூட்டணியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}