- எம்.கே. திருப்பதி
குரைகடல் சூழ்வாழ்
குடியினம் தன்னில்
குறை ஒன்றும் இல்லா
நிறை நிறை நன்னூல்!
ஈரடிச் செய்யுளில்
ஈர்த்த வெண்பா
ஏழ் சீரில் எழுந்து
கோள் வணங்கும் நன்பா!
குறள் என்றால்
குறுகிய வடிவம்: அதன்
குரலைக் கோவிலாய்
கும்பிடும் உலகம்!

குவலயம் கடைத்தேற
குறித்தது குறள் ஈரடி
ஈரடியால் ஈரப்பட்டு கிடக்கும்
ஈரத்தமிழன் நாவடி!
அதிகாரம் ஆயிரத்து
முன்னூற்று முப்பது...
காலம் காலமாக நம்
கருத்தில் நிற்பது!
அறம் பொருள் இன்பம்
அனைத்தும் நல்கிய
தனித் தமிழ்மறை!
தரணியின் பொதுமறை!
திருக்குறள் தீட்டிய
திருமகன்
தெய்வப்புலவன்
மெய்யது தொழுவோம்!
தமிழின் சிறப்பை
தமிழன் சிறப்பை
தலைமேல் ஏற்றி
தரையெங்கும் புகழ்வோம்!
அசையோடு
அசைந்து வரும்
இசையை நாளும்
அசை போடுவோம்!
நசையோடு நெஞ்சிலேற்றி
பசையோடு பாடுவோம்!
அணுவைத் துளைத்து
ஏழ்கடலை புகுத்தி
குறுகத் தரித்த குறள்!'
அலங்கரிக்கும் இப்படி!
அணிந்துரை எப்படி?
தமிழா நீ
தமிழை எண்ணி
தருக்கலாம்! அதன்
தகவைப் பெருக்கலாம்!
இன் தமிழா -- இரு நீ
இமயப் பொருப்பாய்!
இயங்கலில் இரு நீ
இமையா பொறுப்பாய்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}