- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: சுவர் இருந்தால்தான் டிராயிங் வரைய முடியும்.. அதாங்க சித்திரம்.. அப்படித்தான் நம்ம உடம்பும். உடம்பு ஆரோக்கியமாக இருந்தால்தான் வாழ்க்கையை வாழ முடியும்.
இதனால்தான் பெரியவர்கள் அந்தக் காலத்தில் பல நல்ல விஷயங்களைச் சொல்லிச் சென்றுள்ளனர். அதை நேரடியாக கூறினால் நாம் ஏற்க மாட்டோம் என்பதால்தான் குட்டிக் கதைகள், புராணக் கதைகள், விரதங்கள் என பல ரூபங்களில் இதைச் சொல்லி வைத்த்துள்ளனர்.
அதில் இரண்டு ஐட்டத்தை இப்போது பார்ப்போம்.
1. ஆயிலை குறைத்து ஆயுளைப் பெருக்கு

oil..oil..oil.. ஆமாங்க oilல் பொறித்த பண்டங்கள், ஸ்நாக்ஸ் ஐயிட்டம் இல்லாத வீடும் இல்லை, எந்த பண்டிகை மற்றும் கொண்டாட்ட நாளும் இல்லை. Deep fry items தான் குழந்தைகளுக்கும் ஏன் நமக்கும் ரொம்ப பிடிக்கும்.
ஆயிலில் செய்த பூரி, மசால் நினைத்தாலே பல பேருக்கு நாவில் எச்சில் ஊறும் இல்லையா? சாப்பிடலாம். ஆனால் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை எடுத்துக் கொள்ளலாம்.
முடிந்தவரை காய்கறிகளை வேகவைத்து குழம்பிலும், வெஜிடபிள் சாலட், வெஜிடபிள் சூப் போன்று செய்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். அதே போல் இனிப்பான உணவுகள் சாப்பிடுவதும் பலருக்கும் பிடிக்கும். மகிழ்ச்சியான தருணங்களை கொண்டாட ஸ்வீட் சாப்பிடலாம். ஆனால் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லதல்ல.
2. சீரகம் இல்லா உணவு சிறக்காது.
சீரகம்=சீர்+அகம். அகத்தை சீராக்கும். நம் உடலை சீராக வைத்துக் கொள்ள அதீத முக்கியமானது சீரகம். முதலில் தண்ணீரில் சீரகம் போட்டுக் குடிக்கலாம். ஜீரண சக்திக்குள், உடல் குளுமைக்கும் வழிவகுக்கும். தினமும் ரசம், சூப், குழம்பு, பொறியல், க6ட்டு சாம்பார் என அனைத்து உணவு வகைகளிலும் பயன்படுத்தலாம்.
1. சீரகத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது.2. இரத்த ஓட்டம் மேம்படும். அஜீரணம் மற்றும் வாயு போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கும். சைவம், அசைவம் உணவுகளில், மசாலா பொருட்களில் மிக முக்கிய பங்கு சீரகத்திற்கு உண்டு.
சீரகப் பொடியுடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் வயிறு எரிச்சல் குணமாகும்.
என்னங்க கேட்டுக்கிட்டீங்களா.. பாலோ பண்ணுங்க.. ஹேப்பியா வாழுங்க.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்
சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்
எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!
இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!
சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!
நீலத்திரைக்கடலோரம்!
{{comments.comment}}