புதுச்சேரி: அதிமுக மீது உண்மையில் அக்கறையும் பாசமும் இருந்தால், திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் இன்று பேசிய அன்பழகன் இதுகுறித்துக் கூறுகையில், தமிழக பிஜேபி மற்றும் அதிமுக கூட்டணியை தினந்தோறும் விமர்சித்து பேசும் திருமாவளவனுக்கு அதிமுக மீது உண்மையில் பாசமும் அக்கறை இருந்தால் திமுக கூட்டணியில் இருந்து அவர் முதலில் வெளியேற வேண்டும் என்றார்.
காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதேபோன்று யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஏன் ராகுல் காந்தி வலியுறுத்தவில்லை.

பெருந்தலைவர் காமராஜரின் எளிமையான வாழ்க்கையை கொச்சைப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவா பேசியிருக்கிறார் மறைந்த தலைவர்களை பற்றி பேசுவது என்பது மிகுந்த கண்டனத்திற்குரியது ஏற்றுக் கொள்ளக்கூடாது.
பேரறிஞர் அண்ணாவை பாஜக விமர்சனம் செய்த போது உடனடியாக கூட்டணி இருந்து வெளியேறியது தான் அதிமுக. காமராஜர் பெயரை சொல்லி கட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சியினர் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவார்களா. காமராஜரை இழிவுபடுத்திய திமுகவினரை கண்டிக்க திராணி இல்லாதவர்கள் தான் காங்கிரஸார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவா காமராஜர் பற்றி பேசிய இழிவான செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் அவர்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}