புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அக்டோபர் 30ஆம் தேதியும் விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை வரவேற்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தயாராகி வருகின்றனர். அதேபோல் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களின் சொந்த ஊருக்கு செல்லவும் மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில் சேவையையும் செயல்படுத்தி வருகிறது.
தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. இதனைத் தொடர்ந்து சொந்த ஊர் செல்ல விரும்புபவர்கள் உடனே திரும்ப முடியாத காரணத்தால் வெள்ளிக்கிழமையும் பொது விடுமுறை அளிக்க கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகையை கொண்டாட வியாழன், வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறு, என மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தீபாவளி முந்தின நாள் கடைகளில் கூட்ட நெரிசல், வீட்டில் வேலை செய்தல் உள்ளிட்ட காரணங்களால் தீபாவளிக்கு முந்தின நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசிடம் தொடர் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 30-ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மற்றும் ஏனாமில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இதற்கு மாற்றாக 16 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளித்ததால் மாணவ மாணவிகள் உற்சாகமடைந்து வருகின்றனர் .
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 தேர்தலுக்கு.. தவெக கேட்கப் போகும் சின்னம் என்னாவா இருக்கும்.. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
Roston Chase.. வெஸ்ட் இண்டீஸ் Test அணிக்கு புதிய கேப்டன்.. 2 வருட கேப்புக்குப் பிறகு விளையாடுகிறார்!
ஆபரேஷன் சிந்தூர் அதிரடி எதிரொலி.. பாதுகாப்புத்துறை பட்ஜெட் ரூ.50,000 கோடி அதிகரிக்க வாய்ப்பு
ஜூலை 4 முதல் 10ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெறும்: அரசுத் தேர்வுகள் இயக்கம்
இது வெறும் டிரெய்லர் தான்... ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை... மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
Maman movie: ஏண்டா தம்பிகளா, மண் சோறு சாப்பிட்டா எப்படிடா படம் ஓடும்.. நடிகர் சூரி ஆதங்கம்!
நிதி ஆயோக் கூட்டம்: மே 24 முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்!
ஆடு மாடுகளோடு நிம்மதியாக விவசாயம் பார்க்கிறேன்.. இப்படியே இருக்கப் போறேன்.. அண்ணாமலை
தமிழகத்தில்.. பள்ளிகள் திறப்பு எப்போது..? தேதி அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
{{comments.comment}}