புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு.. அக்டோபர் 30ம் தேதியும் லீவு.. தீபாவளிக்காக ஸ்பெஷல் அறிவிப்பு!

Oct 28, 2024,03:12 PM IST

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அக்டோபர் 30ஆம் தேதியும் விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.


தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி  நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை வரவேற்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தயாராகி வருகின்றனர். அதேபோல் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களின் சொந்த ஊருக்கு செல்லவும் மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக அரசு  சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில் சேவையையும் செயல்படுத்தி வருகிறது.




தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. இதனைத் தொடர்ந்து சொந்த ஊர் செல்ல விரும்புபவர்கள் உடனே திரும்ப முடியாத காரணத்தால் வெள்ளிக்கிழமையும் பொது விடுமுறை அளிக்க கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகையை கொண்டாட வியாழன், வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறு, என மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் தீபாவளி முந்தின நாள் கடைகளில் கூட்ட நெரிசல், வீட்டில் வேலை செய்தல் உள்ளிட்ட காரணங்களால் தீபாவளிக்கு முந்தின நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசிடம் தொடர் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 30-ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மற்றும் ஏனாமில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. 


இதற்கு மாற்றாக 16 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளித்ததால் மாணவ மாணவிகள் உற்சாகமடைந்து வருகின்றனர் .



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!

news

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்

news

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

news

ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

news

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1996 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!

news

தமிழ் தெரிந்தவர்களுக்கு வடபழநி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்

news

மணக்கமணக்க சாப்பிடலாம்.. மதுரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா 2025.. சுவைக்க வாங்க!

news

இலவச விமானப் பயணம்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தரும் அசத்தலான சலுகை!

அதிகம் பார்க்கும் செய்திகள்