புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அக்டோபர் 30ஆம் தேதியும் விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை வரவேற்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தயாராகி வருகின்றனர். அதேபோல் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களின் சொந்த ஊருக்கு செல்லவும் மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில் சேவையையும் செயல்படுத்தி வருகிறது.

தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. இதனைத் தொடர்ந்து சொந்த ஊர் செல்ல விரும்புபவர்கள் உடனே திரும்ப முடியாத காரணத்தால் வெள்ளிக்கிழமையும் பொது விடுமுறை அளிக்க கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகையை கொண்டாட வியாழன், வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறு, என மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தீபாவளி முந்தின நாள் கடைகளில் கூட்ட நெரிசல், வீட்டில் வேலை செய்தல் உள்ளிட்ட காரணங்களால் தீபாவளிக்கு முந்தின நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசிடம் தொடர் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 30-ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மற்றும் ஏனாமில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இதற்கு மாற்றாக 16 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளித்ததால் மாணவ மாணவிகள் உற்சாகமடைந்து வருகின்றனர் .
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்
உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதாய்யா.. லேட்டாகுமாம்.. அமெரிக்கா அறிவிப்பு!
டிட்வா புயல் பாதிப்பு...ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை லீவு?.. என்ன காரணம் தெரியுமா.. வாங்க இதைப் படியுங்க!
மதகு சரி செய்யாததால் குழந்தை உயிரிழப்பு... திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில்.. 2.33 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. பரணி தீபத்தின் விசேஷம் என்ன தெரியுமா?
{{comments.comment}}