சென்னை: தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் இடமாற்றம் என்பது அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று இரவு 16 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு பிறப்பித்துள்ளார்.
கவிதா ராமு இடமாற்றம்
அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக ஆனி மேரி ஸ்வர்ணா நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக உமா, புதுக்கோட்டை கலெக்டராக மெர்சி ரம்யா நியமிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட மக்களின் மனம் கவர்ந்த கலெக்டர் கவிதா ராமு மாற்றப்பட்டுள்ளார்.
கவிதா ராமு ஐஏஎஸ் வணிகவரித்துறை இணை ஆணையராக (புலனாய்வு) இடமாற்றம் செய்யப்பட்டு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். புதுக்கோட்டை கலெக்டராக சிறப்பாக அவர் செயல்பட்டு வந்தார் என்பது நினைவிருக்கலாம். வேங்கைவயல் விவகாரத்தில் புதுக்கோட்டை மாவட்ட அரசு நிர்வாகத்தின் செயல்பாடு கடும் கேள்விக்குறியான நிலையில் தற்போது கவிதா ராமு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருந்து வரும் தீபக் ஜேக்கப் தஞ்சாவூர் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய கலெக்டராக கலைச்செல்வி மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு புதிய கலெக்டராக கமல் கிஷோர் பணியாற்றுவார்.
சிவகங்கைக்கு ஆஷா அஜீத்
மதுரை மாவட்டத்தின் கலெக்டராக சங்கீதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரத்திற்கு விஷ்ணு சந்திரன், சிவகங்கைக்கு ஆஷா அஜீத், திருப்பூர் கலெக்டராக கிருஸ்துராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரியின் புதிய கலெக்டராக சராயு நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி கலெக்டராக ராகுல்நாத், திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு கலெக்டராக ராஜகோபால் சுங்கரா அறிவிக்கப்பட்டுள்ளார். நாகப்பட்டனம் மாவட்டத்தின் புதிய கலெக்டரா ஜான் டாம் வர்கீஸ் செயல்படுவார்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}