சென்னை: தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் இடமாற்றம் என்பது அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று இரவு 16 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு பிறப்பித்துள்ளார்.
கவிதா ராமு இடமாற்றம்
அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக ஆனி மேரி ஸ்வர்ணா நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக உமா, புதுக்கோட்டை கலெக்டராக மெர்சி ரம்யா நியமிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட மக்களின் மனம் கவர்ந்த கலெக்டர் கவிதா ராமு மாற்றப்பட்டுள்ளார்.

கவிதா ராமு ஐஏஎஸ் வணிகவரித்துறை இணை ஆணையராக (புலனாய்வு) இடமாற்றம் செய்யப்பட்டு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். புதுக்கோட்டை கலெக்டராக சிறப்பாக அவர் செயல்பட்டு வந்தார் என்பது நினைவிருக்கலாம். வேங்கைவயல் விவகாரத்தில் புதுக்கோட்டை மாவட்ட அரசு நிர்வாகத்தின் செயல்பாடு கடும் கேள்விக்குறியான நிலையில் தற்போது கவிதா ராமு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருந்து வரும் தீபக் ஜேக்கப் தஞ்சாவூர் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய கலெக்டராக கலைச்செல்வி மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு புதிய கலெக்டராக கமல் கிஷோர் பணியாற்றுவார்.
சிவகங்கைக்கு ஆஷா அஜீத்

மதுரை மாவட்டத்தின் கலெக்டராக சங்கீதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரத்திற்கு விஷ்ணு சந்திரன், சிவகங்கைக்கு ஆஷா அஜீத், திருப்பூர் கலெக்டராக கிருஸ்துராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரியின் புதிய கலெக்டராக சராயு நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி கலெக்டராக ராகுல்நாத், திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு கலெக்டராக ராஜகோபால் சுங்கரா அறிவிக்கப்பட்டுள்ளார். நாகப்பட்டனம் மாவட்டத்தின் புதிய கலெக்டரா ஜான் டாம் வர்கீஸ் செயல்படுவார்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}