என்னுள்ளே என்னவள்!

Jun 29, 2026,10:53 AM IST

- புலவர் ப.ஈஸ்வரநாதன்


என்னுள்ளே என்னுயிராய் என்னவள் கலந்திருக்க....

காணாமல் நானும்  கண் கலங்கிருக்க ....


வருவாய் என்றே விழிகள் பூத்திருக்க.  ...

தென்றலாய் வருடினாய் தேகம் சிலிர்க்க ....


மழையாய் பொழிந்தாய் 

மனதை நனைக்க ...


மேகமாய் வந்து மின்னலாய் மறைந்தவளே...

பாசம் காட்டியே மோசம் செய்தவளே...




வழிந்த கண்ணீரில் காதலாய்  சிந்தியவளே...

வாழ்க்கை வாழ்ந்திடவே வந்துவிடு என்னுள்ளே!


(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர்

பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர். மற்றும் நெறியாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்