வடை சாப்பிட நின்ற அந்த கேப்பில்.. 5 லட்சம் தங்கச் சங்கிலி, மொபைல் போனை பறித்த திருடன்!

Aug 31, 2024,05:02 PM IST

புனே: புனேவில் வடா பாவ் சாப்பிட நின்றிருந்த பெண்ணிடமிருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி, மொபைல் போன் உள்ளிட்டவற்றை ஒரு திருடன் பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


புனேவைச் சேர்ந்த வயதான தம்பதியினர் வங்கிக்குப் போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் வடா பாவ் சாப்பிடுவதற்காக ஒரு சாலையோர ஹோட்டலுக்கு சென்னறனர்.  வடா பாவ் வாங்குவதற்காக கணவர் ஹோட்டலுக்குள் செல்ல, மனைவி ஸ்கூட்டருக்கு அருகே  நின்று கொண்டிருந்தார். 




அவருக்கு அருகே வெள்ளை நிற சட்டை போட்டு ஒரு நபர் நின்றிருந்தார். அப்போது அந்த இடத்திற்கு முகத்தில் மாஸ்க் போட்ட ஒரு நபர் பைக்கில் வந்தார். அந்த நபர், மூதாட்டியைப் பார்த்து, கீழே ஏதோ கிடக்குது பாருங்க என்று கூப்பிட்டார். இதையடுத்து பாட்டி என்ன ஏது என்று பார்க்க ஆரம்பித்தார். அப்போது வெள்ளைச் சட்டை போட்ட நபர், ஸ்கூட்டரில் வைக்கப்பட்டிருந்த கைப்பையை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி விட்டான்.


என்ன நடந்தது என்பதை ஊகிக்க முடியாத அந்தப் பெண் பிறகு சுதாரித்துக் கொண்டு கத்தியபடி அந்த நபரைத் துரத்தினார். ஆனால் அந்த நபரோ பறந்து விட்டார். அந்தப் பையில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி, மொபைல் போன், வங்கி ஆவணங்கள் உள்ளிட்டவை இருந்ததாம். 


இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடா பாவ் சாப்பிடுவதற்காக காத்திருந்த பாட்டியிடம் இப்படி பட்டப் பகலில் துணிகரமாக நடந்த திருட்டு அதிர வைத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

news

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!

news

2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!

news

குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்

news

2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!

news

Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

news

அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

news

அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்