சென்னை: 2025-26ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைப்படி, கடந்த ஆண்டைப் போலவே, 2025-2026வது கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.

ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் மாதம் 18ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கி,செப்டம்பர் 26ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஒன்று முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணாக்கருக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 15ல் தொடங்கி டிசம்பர் 23ல் நிறைவடையும். டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்படும்.
2025-26ம் கல்வியாண்டிற்கா பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}