சென்னை: 2025-26ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைப்படி, கடந்த ஆண்டைப் போலவே, 2025-2026வது கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.

ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் மாதம் 18ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கி,செப்டம்பர் 26ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஒன்று முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணாக்கருக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 15ல் தொடங்கி டிசம்பர் 23ல் நிறைவடையும். டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்படும்.
2025-26ம் கல்வியாண்டிற்கா பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
உன் கண்ணில் நீர் வழிந்தால்!
நான் எழுதுவது கவிதையல்ல..!
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
{{comments.comment}}