டெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு கார்கே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் பற்றி பேச சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்தை கூட்டும்படி கேட்டுள்ளார். இந்த தாக்குதலில் 35 சுற்றுலா பயணிகள் மற்றும் ஒரு காஷ்மீரி கொல்லப்பட்டனர்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இதே கோரிக்கையை பிரதமரிடம் வைத்துள்ளார். நாட்டு ஒற்றுமையை காட்டவும், பயங்கரவாதத்தை எதிர்க்கவும் இந்த சிறப்பு கூட்டத்தொடர் உதவும் என்று நம்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், பஹல்காம் தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் உலுக்கியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்திருக்கிறோம் என்பதை நாம் காட்ட வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கோரியுள்ளார்.
மல்லிகார்ஜுன் கார்கே எழுதிய கடிதத்தில், பிரதமர் அவர்களே, ஒற்றுமை தேவைப்படும் இந்த நேரத்தில், பாராளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்
தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
{{comments.comment}}