டெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு கார்கே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் பற்றி பேச சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்தை கூட்டும்படி கேட்டுள்ளார். இந்த தாக்குதலில் 35 சுற்றுலா பயணிகள் மற்றும் ஒரு காஷ்மீரி கொல்லப்பட்டனர்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இதே கோரிக்கையை பிரதமரிடம் வைத்துள்ளார். நாட்டு ஒற்றுமையை காட்டவும், பயங்கரவாதத்தை எதிர்க்கவும் இந்த சிறப்பு கூட்டத்தொடர் உதவும் என்று நம்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், பஹல்காம் தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் உலுக்கியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்திருக்கிறோம் என்பதை நாம் காட்ட வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கோரியுள்ளார்.

மல்லிகார்ஜுன் கார்கே எழுதிய கடிதத்தில், பிரதமர் அவர்களே, ஒற்றுமை தேவைப்படும் இந்த நேரத்தில், பாராளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
அதிமுக மயமாகும் தவெக.. கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்.. இன்று இணைகின்றனர்!
Tamil Short Story: அழகு கோலம்!
Tamil Poem: மன(தின்)வலி
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!
தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’
{{comments.comment}}