டெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு கார்கே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் பற்றி பேச சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்தை கூட்டும்படி கேட்டுள்ளார். இந்த தாக்குதலில் 35 சுற்றுலா பயணிகள் மற்றும் ஒரு காஷ்மீரி கொல்லப்பட்டனர்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இதே கோரிக்கையை பிரதமரிடம் வைத்துள்ளார். நாட்டு ஒற்றுமையை காட்டவும், பயங்கரவாதத்தை எதிர்க்கவும் இந்த சிறப்பு கூட்டத்தொடர் உதவும் என்று நம்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், பஹல்காம் தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் உலுக்கியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்திருக்கிறோம் என்பதை நாம் காட்ட வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கோரியுள்ளார்.

மல்லிகார்ஜுன் கார்கே எழுதிய கடிதத்தில், பிரதமர் அவர்களே, ஒற்றுமை தேவைப்படும் இந்த நேரத்தில், பாராளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
Heritage day.. தமிழ்ப் பாரம்பரியத்தைப் போற்றுவோம்.. கொண்டாடுவோம்!
{{comments.comment}}