புதுடில்லி: கெளதம் அதானி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ரூ.16,800 கோடி மதிப்பிலான சூரிய மின்சக்தி திட்ட ஒப்பந்தத்தை பெற அதானி ரூ.2,100 கோடி லஞ்சம் தர முன்வந்ததாக நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை பெற்றதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அதானி மட்டுமின்றி அவரது உறவினர்கள் உள்ளிட்ட 7 பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அதானி உள்ளிட்டோருக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அதானி நிறுவன பங்குகளுக்குப் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் ரூ. 2 லட்சம் கோடிக்கு மேலான இழப்பை அதானி நிறுவனங்கள் சந்தித்துள்ளன.
இன்று காலை முதல் அதானி பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அதானி குழுமத்தின் பங்கு வீழ்ச்சியால் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளும் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அதானிக்குக் கடன் கொடுத்துள்ள ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ், ஐடிஎப்சி உள்ளிட்ட வங்கிகளின் பங்குகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன.
இந்நிலையில், அதானி விவகாரம் குறித்து எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும். இந்தியாவில் இருக்கும் வரை அதானியை கைது செய்யவோ அல்லது விசாரணை நடத்தவோ மாட்டார்கள். ஏனென்றால் அரசு அவரைக் காப்பாற்றுகிறது.
அவர் இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் சட்டத்தையும் மீறி உள்ளார் என்பதை நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் தெளிவாக காட்டுகிறது. முறைகேடு வழக்குகளில் நாட்டின் முதலமைச்சர்களே கைது செய்யப்படும்போது அதானி சுதந்திரமாக சுற்றுவது ஏன்? எதிர்கட்சி தலைவராக மக்களவையில் இந்த விவகாரத்தை நான் கேள்வி எழுப்புவேன்.
நாங்கள் தொடர்ந்து அதானி குறித்தும் செபி தலைவர் மாதவி புச் குறித்தும் பேசி வருகிறோம். விசாரணை கோரி வருகிறோம். ஆனால் இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதானியை பிரதமர் மோடி காப்பாற்றுகிறார். இதனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}