சென்னை: வங்க கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று அநேக பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதேபோல் ஒரு சில பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. குறிப்பாக கும்பகோணம், சீர்காழி, வந்தவாசி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதிகளில் மழைநீர் தேங்கி சாலைகளில் வாகனங்கள் செல்ல கடும் சிரமம் ஏற்பட்டது. அதேசமயம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதிகளில் மிக கனமழை வெளுத்து வாங்கியது.

இதற்கிடையே தற்போது திருவள்ளுவர் மாவட்டம் மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு, சோழவரம், செங்குன்றம், உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை நல்ல மழை பெய்துள்ளது. சென்னை செம்மஞ்சேரியில் அதிகபட்சமாக 5.4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் வங்க கடலில் வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா பகுதிகளில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தழ்வுப் பகுதி இன்னும் 3 தினங்களில் வடக்கு மற்றும் வடமேற்கு வங்க கடல் திசையை நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என கணித்துள்ளது.
இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏற்கனவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}