சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை பரவலாக மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று அனேக இடங்களில் மிதமான கனமழை கொட்டி தீர்த்தது. அதில் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை நீடித்தது. அதேபோல் கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால் பஞ்சலிங்க அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.இதனால் திருமூர்த்தி மலை அடிவாரத்தில் உள்ள கோயிலை மழை நீர் சூழ்ந்தது.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியதில் அய்யர்மலை, ரத்னகிரீஸ்வர் மலையில் உள்ள கோயில் படிக்கட்டுகளில் மழை நீர் அருவி போல் கொட்டியது. அதே சமயம் தேனி, ஆண்டிப்பட்டி, உதகை, மதுரை, உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது. குறிப்பாக உதகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 5.3 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 25 ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் கோவை, சேலம், கிருஷ்ணகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
TVK Vijay Campaign: விஜய்யின் பிரச்சார தேதியில் திடீர் மாற்றம்...காரணம் இது தானா?
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது Oracle நிறுவனம்
Puducherry election 2026 என்னது வீட்டில் இருந்தே பிரச்சாரம் செய்ய போகிறாரா விஜய்?
ஈரான் போர் முடிவுக்கு வருதா? விரைவில் வெளியேறப்போவதாக டிரம்ப் அறிவிப்பு
மதிமுக.,வின் 4 தொகுதிகளிலும் உதயசூரியன்...திடீரென முடிவை மாற்றிய வைகோ
சசிகலா கட்சியில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்...உசிலம்பட்டி வேட்பாளராக அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நாயராவை தொடர்ந்து ஷெல் நிறுவனம் அதிரடி
மணிமாவின் April 1.. நீங்கள் ஏமாற்றப் போகிறீர்களா.. அல்லது ஏமாறப் போகிறீர்களா?
மாடித் தோட்ட அலப்பறைகள்.. அவ்வப்போது மொக்கை வாங்கினாலும்.. மொட்டுக்கள் மலரும்போது.. ஆஹா!
{{comments.comment}}