சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 7 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தும் மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாகவும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை கொட்டு தீர்த்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி அணைக்கு வரும் அளவு அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும். இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 7 வரை மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை எதிர்பார்க்கலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
அதேபோல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தற்போது 1.73 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீரானது டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றிற்கு வந்து கொண்டிருப்பதால் கொள்ளிடம் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் காவிரியில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் இருந்த இரண்டு உயரழுத்த மின் கோபுரங்கள் நீரின் வேகத்தை தாக்குப் பிடிக்காமல் சாய்ந்தது. அதில் ஒன்று நேற்று இரவு விழுந்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை மற்றொரு மின் கோபுரமும் விழுந்து ஆற்றுக்குள் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனால் கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து ஆறு மணி நேரமாக இதனை சரி செய்யும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது முக்கொம்பு மேல் அணையிலிருந்து காவிரி ஆற்றில் 31 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 75 ஆயிரம் கன அடி நீரும் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக 169 இடங்களில் போட்டி...கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 65 தொகுதிகள் விபரம்
தளி முதல் ராசிபுரம் தனி வரை.. பாஜக போட்டியிடப் போகும் தொகுதிகள் இவைதான்.. Full list
பேளூர் தான் தோன்றீஸ்வரர் கோவில் திருக்குடமுழக்கு விழா
நீங்க ஏன் எப்போதும் தனியா இருக்கிறீங்க?.. (மனிதம் மலர்கையில் - 7)
UPI PIN மறந்து போச்சா? கவலை வேண்டாம்...ஈஸியா பணம் அனுப்ப வழி இருக்கு
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி...கேன்சல் டிக்கெட்டிற்கு இனி ரீஃபண்ட் கிடையாதாம்
ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்வோருக்கு முக்கிய அறிவுறுத்தல்
தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியில்லை...வேல்முருகன் அதிரடி அறிவிப்பு
ADMK candidates: 23 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடியில் மீண்டும் பழனிச்சாமி போட்டி!
{{comments.comment}}