தொடங்கியது ரமலான் நோன்பு.. புனித மாதத்தில் இருக்கும் நோன்புக்கு என்ன பலன் கிடைக்கும்?

Mar 12, 2024,11:11 AM IST

சென்னை: ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் நேற்று பிறை தெரிந்ததை தொடர்ந்து இன்று முதல் ரமலான் நோன்பு துவங்கியுள்ளது.


ஒவ்வொரு வருடமும் வரும் 12 மாதத்தில் இஸ்லாமிய நாட்காட்டியின் படி வரும் ஒன்பதாவது மாதம் ரமமதான். இந்த மாதம் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த சமயத்தில் இஸ்லாமியர்கள் 29 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை நோன்பு மேற்கொள்வது வழக்கம்.


இஸ்லாமியர்களின்  நோன்புகள்: 




பொதுவாக எல்லா மாதத்திலும் அம்மாவாசை முடிந்து மூன்றாவது நாள் பிறை தெரியும். இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதம் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் பிறை பார்த்த பின்னரே நோன்புகளை தொடங்குவார்.அந்த வகையில் நேற்று பிறை தெரிந்தது. 2024 ஆம் ஆண்டுக்கான ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த நோன்பின் இறுதி நாளை ரம்ஜான் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 


முன்னதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாஹுதீன் முகமது அயூப் நேற்று  பிறை தெரிந்தை தொடர்ந்து இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார். 


இஸ்லாமியர்கள் நோன்பு எப்படி பின்பற்றுவர்:


இஸ்லாமியர்கள் நோன்புகளை மேற்கொள்ளும்போது அதிகாலையிலேயே சாப்பிட்டு முடித்து விடுவர். பின்னர் காலை சூரியன் உதிப்பது முதல் மாலை சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பர். அந்த நேரத்தில் தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள். அன்றைய தினம் மாலை பள்ளிவாசல் சென்று தொழுகையை முடித்து, நோன்பு கஞ்சி அருந்திய பின்னரே நோன்பு முடிப்பர்.


ரம்ஜான் நோன்பின் மகிமைகள்:


நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை எல்லாம் விலக்கி, இறைவனிடத்திலுள்ள நன்மையை மட்டுமே எதிர்பார்த்தவராக இருப்பது. நோன்பு இருப்பவர்கள் பகல் நேரத்தில் தன்னையே கட்டுப்படுத்திக் கொள்வது. இது ஒரு சடங்காகக் கருதாமல் வணக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மேற்கொள்ளப்படுகிறது. நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.


இறையச்சம் என்பது அல்லாவிற்கு பயந்து, அறிவுறுத்திய செயல்களை செய்தும், தடை செய்தவைகளை செய்யாமல் இருப்பது தான்.


இந்த நாளில் வசதி இல்லாதவர்கள் பசி பட்டினியோடு இருப்பதை உணர்வதற்காகவே நோன்பு இருந்து வருகின்றனர் இஸ்லாமியர்கள். மேலும் நோன்பு மேற்கொள்ளும் போது ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதே இஸ்லாமியர்களின் தலையாய கடமையாகும். இந்த உதவியை இஸ்லாமியர்கள் சகத் என்றும் அழைக்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

Let us celebrate Erode day

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

ஆல் இன் ஆல் இறையன்பு.. ஐஏஎஸ்ஸுக்குள் மறைந்திருக்கும் இலக்கியவாதி!

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்