மும்பை: நடிகை ராஷ்மிகா மந்தன்னாவுக்கு சின்னதா ஆக்சிடன்ட் ஆயிருச்சாம். அதனால்தான் இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைப் பக்கங்களில் இடையில் அவரைக் காணோமாம். இப்ப சரியாயிட்டாராம்.
பான் இந்தியா நாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா. தமிழ், தெலுங்கு, இந்தி என்று புயல் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறார் புஷ்பா நாயகி. சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக வலம் வருபவர். ஆனால் சமீப காலமாக அதிகம் ஆக்டிவாக இல்லை. இதனால் ரசிகர்கள் என்னாச்சு என்ற கேள்விகளைக் கேட்டு வந்தனர்.
இதற்கான விளக்கத்தை ராஷ்மிகாவே கொடுத்துள்ளார். அது இதுதான்:

ஹாய் கய்ஸ்.. எப்படி இருக்கீங்க.. கொஞ்ச நாளை நான் இந்தப் பக்கம் வரலைன்னு உங்களுக்கு தெரியும். பொது வெளியில் கூட என்னை அதிகம் பார்த்திருக்க மாட்டீங்க. அதுக்கு என்ன காரணம்னா, கடந்த ஒரு மாசமா நான் வெளியில் தலை காட்டலை. சின்னதா ஒரு ஆக்சிடன்ட் ஆயிருச்சு. அதுதான் காரணம். ரொம்பெல்லாம் இல்லை, ரொம்ப சின்ன ஆக்சிடன்ட்தான்.
வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்து வந்தேன். டாக்டர்ஸ், அதிகம் அலட்டிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தனர். அதனாலதான் வர முடியல்லை. இப்போ நல்லாயிட்டேன். கொஞ்சம் பரவாயில்லை. சூப்பர் ஆக்டிவாக மாறக் கூடிய தருணத்திற்கு வந்துட்டேன். எனது வேலைகளையும் செய்ய ஆரம்பிச்சிருக்கேன்.
எப்பவுமே உங்களை முதல்ல நல்லா பாத்துக்கங்க. வாழ்க்கை ரொம்ப ரொம்ப சின்னது, விரைவிலேயே முடிஞ்சுப் போகக் கூடியது. நாளைக்கு வருமான்னு தெரியாது.. ஸோ, இன்னிக்கு உள்ள நாளை சந்தோஷமா கழிங்க.
அப்புறம் காதைக் கொடுங்க.. இன்னொரு முக்கியமான விஷயம்.. இப்ப நிறைய லட்டு சாப்பிட்டுட்டு இருக்கேன் என்று கூறி கலகலப்பைக் கொடுத்துள்ளார் ராஷ்மிகா.
ஒரு லட்டு.. ஏகப்பட்ட லட்டுக்களை சாப்பிடுகிறதே.. அடடே ஆச்சரியக்குறி.. அப்படின்னு போய் அவங்க இன்ஸ்டா பக்கத்துல கவிதை எழுதுங்க ஓடுங்க ஓடுங்க!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}