மும்பை: தான் நலமாக இருப்பதாகவும், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்தியாவின் முது பெரும் தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.
இந்தியாவின் மூத்த தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா உடல் நலக்குறைவு காரணமாக மும்பை ப்ரீச்கண்டி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால் அனைவரும் கவலை அடைந்தனர். மேலும் அவர் குறித்த செய்திகளும் வேகமாக பரவின.

இதையடுத்து ரத்தன் டாடா பெயரில் ஒரு விளக்கம் வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது உடல் நிலை குறித்து பல்வேறு வகையான வதந்திகள் பரவுவது குறித்து அறிந்தேன். அவை அனைத்தும் தவறு என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தற்போது எனது வயோதிகம் மறறும் அதுதொடர்பான உபாதைகள் காரணமான வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியத்துடன், மன வலிமையுடன் இருக்கிறேன்.
எனவே பொதுமக்களும், மீடியாக்களும் எனது உடல் நிலை குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ரத்தன் டாடா.
ரத்தன் டாடாவே விளக்கம் அளித்து விட்டதால் அவரது நலம் விரும்பிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் அவர் வீடு திரும்பவும் பிரார்த்திப்பதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!
சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்
மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?
புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு
தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்.. இத்தனையும் ஒரே நாளில் நடந்தவையா?
சட்டசபை தேர்தலை குறிவைத்த மத்திய பட்ஜெட் 2026 : தமிழ்நாட்டுக்கு பல புதுத் திட்டங்கள் அறிவிப்பு
{{comments.comment}}